சென்னை மயிலப்பூரில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,
”திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான். எல்லருக்கும் எல்லாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விழா. உண்மையான ஆன்மிகவாதிகள், இறை பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு இந்த திராவிட மாடல் அரசு. எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்வார்த்தையல்ல. இந்த மாநாட்டை பார்க்கும்போது சிலருக்கு எரிச்சல் கூட வரலாம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என மாற்றியது தான் சமூக மாற்றம். கடந்த ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது கூடா யாருக்கும் தெரியாது” என்றார்.
