Close Menu
    What's Hot

    கார்கேவின் ‘காதல்’ பஞ்ச்: “தேவகவுடா எங்களை நேசித்தார்; மோடியை மணந்துவிட்டார்!” நாடாளுமன்றத்தில் சிரிப்பலை!.

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போர் பதற்றம்!. தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    தமிழ்நாடு

    போர் பதற்றம்!. தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    Editor web3By Editor web3March 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    war tamil nadu govt helpline num
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், வளைகுடாவாழ் தமிழர்களுக்கான உதவி எண்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான்-இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது. போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24×7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.

    தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புதுடெல்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள் 011-24193300 (Land line) 92895 16712 (Mobile Number with Whatsapp) அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்: இந்தியாவிற்குள் – 1800 309 3793 வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு – +91 80 6900 9901 என உதவி எண்களை பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉண்மையான ஆன்மீகவாதிகளுக்கு திராவிட மாடல் அரசை விரும்புவர்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை…
    Next Article சூழ்ச்சிகளை அறிவால் முறியடிக்க வேண்டும்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி!
    Editor web3
    • Website

    Related Posts

    கார்கேவின் ‘காதல்’ பஞ்ச்: “தேவகவுடா எங்களை நேசித்தார்; மோடியை மணந்துவிட்டார்!” நாடாளுமன்றத்தில் சிரிப்பலை!.

    March 18, 2026

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    March 18, 2026

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    March 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கார்கேவின் ‘காதல்’ பஞ்ச்: “தேவகவுடா எங்களை நேசித்தார்; மோடியை மணந்துவிட்டார்!” நாடாளுமன்றத்தில் சிரிப்பலை!.

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!, குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. டெல்லியில் பயங்கரம்!.

    Trending Posts

    திமுக – சிபிஐ ஒப்பந்தம்!. 5 தொகுதிகள் ஒதுக்கீடு! கூடுதல் இடங்களுக்காக மல்லுக்கட்டும் CPM!.

    March 18, 2026

    விஜய் – சங்கீதா பிரிவுக்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்?. ஜோஸ் சார்லஸின் பரபரப்பு வீடியோ!

    March 18, 2026

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?. முக்கிய அறிவிப்பு!

    March 18, 2026

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    March 18, 2026

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    March 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.