Close Menu
    What's Hot

    துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்!. சென்னை விமானங்கள் ரத்து!. பயணிகள் தவிப்பு!.

    தங்கம் விலை அதிரடி சரிவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!.

    திமுகவை முந்தும் அதிமுக!. விஜய்தான் கிங் மேக்கர்?. அதிரவைக்கும் தேர்தல் சர்வே!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திக்கரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்!. சவுதியில் பயங்கரம்!
    உலகம்

    உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திக்கரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்!. சவுதியில் பயங்கரம்!

    Editor web3By Editor web3March 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    aramco oil refinery saudi arabia
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபிய அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோ (Saudi Aramco) மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ‘ராஸ் தனூரா’ (Ras Tanura) பகுதியைக் குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘ராஸ் தனூரா’ சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சவூதி அராம்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. ட்ரோன் விழுந்த இடத்தில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க ஈரான் தனது ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4’ (Operation True Promise 4) மூலம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ஆதரவு தளங்கள் மற்றும் எண்ணெய் கட்டமைப்புகளைக் குறிவைத்து வருகிறது.

    சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம், தினமும் 550,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை பதப்படுத்துகிறது. பாரசீக வளைகுடாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இது, சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாகும்.

    2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு சவுதி எண்ணெய் ஆலையில் இவ்வளவு பெரிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. 2019 ஆம் ஆண்டில், ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் அப்கைக் மற்றும் குரைஸ் ஆலைகளைத் தாக்கினர், இது சவுதி உற்பத்தியைப் பாதியாகக் குறைத்து உலக எண்ணெய் சந்தையை உலுக்கியது. இன்றைய தாக்குதல் வளைகுடாவில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $80 ஐ நெருங்கியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதீவிரமடையும் போர்!. அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஐரோப்பா!. ஈரான் மீதான தாக்குதலுக்குத் தயார்!.
    Next Article ஐநா சபையில் ஈரான் முறையீடு!. அமெரிக்காவின் செயல் சர்வதேச பயங்கரவாதம்!. வெளியுறவு அமைச்சர் அரக்ச்சி காட்டம்!
    Editor web3
    • Website

    Related Posts

    துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்!. சென்னை விமானங்கள் ரத்து!. பயணிகள் தவிப்பு!.

    March 16, 2026

    தங்கம் விலை அதிரடி சரிவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!.

    March 16, 2026

    திமுகவை முந்தும் அதிமுக!. விஜய்தான் கிங் மேக்கர்?. அதிரவைக்கும் தேர்தல் சர்வே!.

    March 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்!. சென்னை விமானங்கள் ரத்து!. பயணிகள் தவிப்பு!.

    தங்கம் விலை அதிரடி சரிவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!.

    திமுகவை முந்தும் அதிமுக!. விஜய்தான் கிங் மேக்கர்?. அதிரவைக்கும் தேர்தல் சர்வே!.

    தமிழகத்தில் பரபரப்பு!. என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை!. போலீஸ் அதிரடி!

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    Trending Posts

    துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்!. சென்னை விமானங்கள் ரத்து!. பயணிகள் தவிப்பு!.

    March 16, 2026

    தங்கம் விலை அதிரடி சரிவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!.

    March 16, 2026

    திமுகவை முந்தும் அதிமுக!. விஜய்தான் கிங் மேக்கர்?. அதிரவைக்கும் தேர்தல் சர்வே!.

    March 16, 2026

    தமிழகத்தில் பரபரப்பு!. என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை!. போலீஸ் அதிரடி!

    March 16, 2026

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.