இந்திய உணவில், குறிப்பாக வட இந்தியாவில் சப்பாத்தி (ரொட்டி) என்பது பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். இது செரிமானத்திற்கு எளிதானது மற்றும் சமச்சீரான உணவு என்று நாம் நம்புகிறோம். ஆனால், கோதுமையை அதிகமாக உட்கொள்வது சில ஆரோக்கியக் கேடுகளை விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நிபுணர்கள் கூறுவது என்ன? குருகிராம் பகுதியைச் சேர்ந்த எலும்பியல் நிபுணர் டாக்டர் மனு போரா (Dr. Manu Bora), கோதுமை குறித்து ஒரு மாற்றுக்கருத்தை முன்வைத்துள்ளார். அவரது கூற்றுப்படி, “உணவில் மிக மோசமான ஒரு பொருள் இருக்குமானால் அது கோதுமையாகத்தான் இருக்க முடியும்.” பெரும்பாலான மக்கள் இனிப்புகளை தினமும் சாப்பிடுவதில்லை, ஆனால் கோதுமையை அன்றாட உணவில் ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்கள். இது உடல் எடை அதிகரிப்பதற்கும், வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறுகிறார்.
தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் கோதுமை பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட (Processed) அல்லது சுத்திகரிக்கப்பட்ட (Refined) வடிவிலேயே உள்ளது. இது உடலில் வீக்கம் (Inflammation), உடல் எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளைத் தூண்டலாம்.
பழங்கால மனிதர்கள் இயற்கையாகவே கோதுமையை இவ்வளவு அதிக அளவில் உட்கொண்டதில்லை என்று டாக்டர் போரா கூறுகிறார். ஒரு பொருளைத் தேவைக்கு அதிகமாகச் சாப்பிடும்போது அது உடலைப் பாதிக்கிறது. குறிப்பாகச் சுத்திகரிக்கப்பட்ட கோதுமைப் பொருட்கள் நீண்ட கால அடிப்படையில் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கலாம். எனவே, சுத்திகரிக்கப்பட்ட கோதுமைக்கு பதிலாக முழு தானியக் கோதுமையைத் தேர்வு செய்யலாம்.
