Close Menu
    What's Hot

    கார்கேவின் ‘காதல்’ பஞ்ச்: “தேவகவுடா எங்களை நேசித்தார்; மோடியை மணந்துவிட்டார்!” நாடாளுமன்றத்தில் சிரிப்பலை!.

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.
    இந்தியா

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    Editor web3By Editor web3March 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi uae president
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போரினால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 18) ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை குறித்தும் விரிவாக விவாதித்தனர். குறிப்பாக, அமீரகத்தின் சிவிலியன் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிரதமர் மோடி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு முன்கூட்டியே ஈத் (Eid) பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்தேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுமக்கள் இலக்குகள் மீதான தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. அப்பாவி உயிர்களின் இழப்பையும், உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

    உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். மத்திய கிழக்கில் விரைவில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து செயல்படும் என்று அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தியாவின் எரிசக்தி இறக்குமதிக்கும், அங்கு வாழும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் பாதுகாப்புக்கும் வளைகுடா பிராந்தியம் மிகவும் முக்கியமானது. 2022-ல் கையெழுத்திடப்பட்ட விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்திற்கு (CEPA) பிறகு, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleEV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.
    Next Article அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!
    Editor web3
    • Website

    Related Posts

    கார்கேவின் ‘காதல்’ பஞ்ச்: “தேவகவுடா எங்களை நேசித்தார்; மோடியை மணந்துவிட்டார்!” நாடாளுமன்றத்தில் சிரிப்பலை!.

    March 18, 2026

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    March 18, 2026

    அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!, குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. டெல்லியில் பயங்கரம்!.

    March 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கார்கேவின் ‘காதல்’ பஞ்ச்: “தேவகவுடா எங்களை நேசித்தார்; மோடியை மணந்துவிட்டார்!” நாடாளுமன்றத்தில் சிரிப்பலை!.

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!, குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. டெல்லியில் பயங்கரம்!.

    Trending Posts

    திமுக – சிபிஐ ஒப்பந்தம்!. 5 தொகுதிகள் ஒதுக்கீடு! கூடுதல் இடங்களுக்காக மல்லுக்கட்டும் CPM!.

    March 18, 2026

    விஜய் – சங்கீதா பிரிவுக்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்?. ஜோஸ் சார்லஸின் பரபரப்பு வீடியோ!

    March 18, 2026

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?. முக்கிய அறிவிப்பு!

    March 18, 2026

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    March 18, 2026

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    March 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.