Close Menu
    What's Hot

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம்!

    முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 29) IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு!

    13 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.
    தமிழ்நாடு

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Editor web3By Editor web3April 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay kumari speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடலூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெறவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று ரோடு ஷோ நடத்த தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

    இதற்காக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அப்போது விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கன்னியாகுமரியில் மகாதானாபுரம் ரவுண்டானா பகுதிக்கு வந்த விஜய் சைக்கிளில் சுற்றி வந்தார். இருபக்கமும் திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து விஜய் கை அசைத்தார். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது, “காரைக்குடி மக்களுக்கும் வணக்கம் சொல்லிக்கொள்கிறேன். அன்றைக்கு அங்கே பேச முடியவில்லை. கன்னியாகுமரி மக்களை சந்தித்ததில் சந்தோசம். இங்கே சிலவற்றை அறிவிக்க இருக்கிறேன். தமிழ்நாடு சிட்டிசன் கார்டு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தின் தரவுகள் அதில் சேர்க்கும். வீட்டு வாசலில் அரசின் நலத்திட்டங்கள் போய் சேரும். ஏஐ மூலம் இது செயல்படுத்தப்படும்.

    சட்டப்பேரவையில் மக்களின் மனுக்கள் குறித்து விசாரிக்க நேரம் ஒதுக்கப்படும். தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். தவெக ஆட்சியில் ஆவணங்களின் பெயரால் லஞ்சம் வாங்குவது, அலைக்கழிப்பதை அனுமதிக்க மாட்டோம். நலத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டாம் வீடு தேடி அரசு திட்டம் வரும். நமது அரசு அமைந்த ஆறு மாதங்களுக்குள் “வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்” உருவாக்கப்படும். பல சேவைகள் அந்த செயலியில் இருக்கும்.

    10,000 கையெழுத்துக்களுடன் மனு அளித்தால் அரசு பதில் அளிப்பது கட்டாயமாக்கப்படும். பத்து லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் விவாதிக்கப்படும். புதிய இணையதளத்தை உருவாக்கி அரசுக்கு முன்வைக்க உள்ள ஆலோசனைகளை வழங்கலாம். தமிழக அரசின் சேவைகள் தாமதமானால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும் மக்களின் மனுக்களுக்காகவே ஒதுக்கப்படும். தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.
    Next Article தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.
    Editor web3
    • Website

    Related Posts

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம்!

    June 28, 2026

    முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 29) IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு!

    June 28, 2026

    13 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம்!

    முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 29) IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு!

    13 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

    தங்கம் வாங்குவதை தவிர்த்த மக்களுக்கு நன்றி! – பிரதமர் மோடி

    இந்தியப் பெருங்கடலை பாதுகாப்பதில் இந்தியா- செஷல்ஸ் ஒரே புள்ளியில் இணைகிறது! பிரதமர் மோடி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.