Close Menu
    What's Hot

    அசந்து உறங்கிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் போராட்டம் – விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!
    இந்தியா

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    Editor web3By Editor web3April 27, 2026Updated:April 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mamata banerjee cyber fraud
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    வாக்குப்பதிவு முடிந்த பிறகு, இரண்டு முக்கியமான பாதுகாப்பு அறைகளில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த ‘லோட் ஷெடிங்’ இடைவெளியைப் பயன்படுத்தி, மத்தியப் படைகளின் துணையோடு சமூக விரோதிகள் அந்த இடத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், வாக்கு இயந்திரங்களைக் கைப்பற்ற அல்லது அவற்றில் முறைகேடு செய்ய பாஜக முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    பாஜகவிற்கு எதிராகத் தொடர்ந்து மிகக் கடுமையான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மம்தா, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். “தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்; ஆனால் தற்போது பல அதிகாரிகள் மாற்றப்பட்டு பாஜகவிற்குச் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் இருந்து இலக்கு வைக்கப்பட்ட முறையில் பல பெயர்கள் நீக்கப்பட்டதாக (SIR process) ஏற்கனவே அவர் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது எழுந்துள்ள இந்த ‘மின்வெட்டு’ புகார் தேர்தல் களத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    இருப்பினும், மம்தா பானர்ஜியின் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் முற்றிலுமாக மறுத்துள்ளது. பாதுகாப்பு அறைகளில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், மின்வெட்டு புகார்கள் ஆதாரமற்றவை என்றும் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2021 தேர்தலின்போதும் நந்திகிராம் தொகுதியில் இத்தகைய குளறுபடிகள் நடந்ததாக மம்தா சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இம்முறை வாக்கு இயந்திரங்களைப் பாதுகாக்கத் தனது கட்சித் தொண்டர்கள் மற்றும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெப்ப அலை, காட்டுத்தீ, வெள்ளம்!. ஒரே நேரத்தில் தாக்கும் ‘காலநிலை’ ஆபத்து!. அதிர்ச்சி ஆய்வு!
    Next Article நடிகர் தனுஷின் கர படத்துக்கு தடை கோரி வழக்கு – நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    April 27, 2026

    மகளிர் விடுதியில் கொடூரம் – 20 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை –  67 வயது முதியவர் கைது

    April 27, 2026

    படுக்கையறை பயங்கரம் – அண்டர்கிரவுண்டில் தயாரான ஆயுதங்கள்

    April 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அசந்து உறங்கிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் போராட்டம் – விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் – ஒன்றிய அரசுக்கு எதிராக வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு.

    Trending Posts

    வெப்ப அலை, காட்டுத்தீ, வெள்ளம்!. ஒரே நேரத்தில் தாக்கும் ‘காலநிலை’ ஆபத்து!. அதிர்ச்சி ஆய்வு!

    April 27, 2026

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    April 27, 2026

    மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் நல்ல நாடு அல்ல!. ஈரான் கடும் தாக்கு!

    April 27, 2026

    தபால் வாக்குகளும், இவிஎம்மில் பதிவான வாக்குகளும் ஒரு சேர எண்ணப்படும் –தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    April 27, 2026

    இது எனது கடைசி பேரணி.. பதவியேற்பு விழாவிற்கு மீண்டும் வருவேன்!. மே.வங்கத்தில் பிரதமர் சூளுரை!

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.