தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான புகார்களுக்கு முதலமைச்சர் விஜய் மிகுந்த நிதானத்துடனும் பதிலளித்துப் பேசினார். 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த பின் உரையாற்றிய அவர், தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
“சோபா செட் புகார்களுக்குப் பதிலடி”: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த ‘குதிரை பேரம்’ மற்றும் ‘சோபா செட்’ விமர்சனங்களுக்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், “எனது அரசு நிர்வாகத்தில் ‘குதிரை வேகத்தை’க் கொண்டிருக்கும்; மக்கள் பணிகளை மின்னல் வேகத்தில் முடிப்பதிலேயே எங்கள் கவனம் இருக்கும். ஆனால், ஒருபோதும் ‘குதிரை பேரத்தில்’ ஈடுபடாது. தார்மீக அடிப்படையிலும், ஜனநாயக முறையிலுமே ஆதரவைத் திரட்டியுள்ளோம். இதில் மறைமுக பேரங்களுக்கு இடமில்லை. அடிப்படை ஆதாரமற்ற புகார்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.”
பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முந்தைய அரசின் திட்டங்கள் கிடப்பில் போடப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கும். அதனைப் போக்கும் வகையில் முதல்வர் விஜய் உரையாற்றினார். “முந்தைய திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றித் தொடரும். மக்களின் வரிப்பணத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கே போய்ச் சேர வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற கொள்கை மற்றும் முந்தைய அரசு திட்டங்கள்:
காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று பேசிய அவர், தவெக அரசு எப்போதும் ‘மதச்சார்பற்ற‘ கொள்கையில் உறுதியாக இருக்கும் என்றும், ஜாதி மதங்களைக் கடந்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சமத்துவ ஆட்சியாக இது அமையும் என்றும் உறுதியளித்தார். மேலும், ஆட்சி மாறினாலும் முந்தைய திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் (மகளிர் உரிமைத் தொகை உட்பட) எவ்விதத் தடையுமின்றித் தொடரும் என அறிவித்து மக்கள் மத்தியில் இருந்த அச்சத்தைப் போக்கினார்.
பிரேமலதாவுக்குப் பணிந்த விஜய்:
சட்டமன்றத்தில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா, ‘ராஜகுரு’ என அழைக்கப்படும் ரதன் பண்டிட் நியமனம் குறித்து எழுப்பிய காரசாரமான கேள்விக்கு முதலமைச்சர் நேர்மையான பதிலை அளித்தார். “பிரேமலதா அவர்களின் கேள்வி நியாயமானது” என ஏற்றுக்கொண்ட விஜய், நிர்வாகத்தில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ரதன் பண்டிட்டின் நியமனம் குறித்த உத்தரவை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து, அதனைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
