புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு அவரது உறவினர்களான ஸ்டாலின், சிலம்பரசன் ஆகிய இருவர் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்பொது கோட்டகுப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது முன்னாள் அதிவேகமாக வந்த அரசு சொகுசு பேருந்து ஒரு காரின் பின்புறம் மோதி பிறகு காருக்கு முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் மூவரும் 100 மீட்டர் வரை இழுத்துச் சென்று பேருந்துக்கு அடியில் மாட்டிக் கொண்டனர்.
இந்த கோர விபத்தில், மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் அறிந்து வந்த கோட்டுக்குப்பம் போலீசார் மூவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பீம்ஸ் மருத்துவமனைக்கு அனுபி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
