Close Menu
    What's Hot

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»ஆந்திராவில் இருந்து கோவைக்கு 10 கிலோ கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது!
    மாவட்டம்

    ஆந்திராவில் இருந்து கோவைக்கு 10 கிலோ கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது!

    Editor web1By Editor web1May 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 05 27 at 7.53.16 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்திராவில் இருந்து கோவைக்குக் 10 கிலோ கஞ்சா கடத்திய சம்பவத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் கோவைக்குக் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை, மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நள்ளிரவில் பறிமுதல் செய்தனர். இந்த மெகா கடத்தல் வழக்கில், பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி (History Sheeter) உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கோவை மாநகர மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு, மே 25ம் தேதி இரவு ஆந்திராவில் இருந்து கோவைக்கு லாரியில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கோவை சுங்கம் – ராமநாதபுரம் ரவுண்டானா பகுதியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் அதிவேகமாக வந்த TN 34 AF 8910 என்ற பதிவு எண் கொண்ட சரக்கு லாரியை வழிமறித்துச் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, லாரியின் பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் விசாரணையில், லாரியில் வந்தவர்கள் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பதும் இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தின் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அருண்குமார் (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாகப்பட்டினத்தில் கஞ்சாவை மிகக் குறைந்த விலைக்கு மொத்தமாக வாங்கி, கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் நெட்வொர்க் ஏஜென்ட்டுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய இவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.

    கோவை மாநகர மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், வழக்குப் பதிவு செய்து, மத்திய அரசின் NDPS சட்டப்பிரிவுகள் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், இருவரையும் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை மீண்டும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
    Next Article முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் சித்தராமையா?- கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்!
    Editor web1
    • Website

    Related Posts

    உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?

    May 31, 2026

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    May 31, 2026

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழா-   தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழா-   தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

    ஜூன் 1 முதல் தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.