Close Menu
    What's Hot

    கிரீன்வேஸ் சாலையில் 22 அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள்..!! அரசாணை வெளியீடு..!!

    ரூ.9 கோடி மதிப்பிலான மேம்பாலம் வீண்!. 7 கி.மீ இணைப்பு சாலைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

    இனிமே இப்படித்தான் – மின்சாரத்துறை டெண்டர் குறித்து ஆராய மூன்று குழுக்கள் அமைப்பு  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»சாலையில் பேனர் வைக்க எதிர்ப்பு!. ரோந்து காவலரின் கையை உடைத்த தவெக நிர்வாகிகள் கைது!
    Featured

    சாலையில் பேனர் வைக்க எதிர்ப்பு!. ரோந்து காவலரின் கையை உடைத்த தவெக நிர்வாகிகள் கைது!

    Editor web3By Editor web3May 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kumbhakonam police tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கும்பகோணத்தில் சாலையின் குறுக்கே இடையூறாக பேனர் வைப்பதைத் தட்டி கேட்ட போக்குவரத்து ரோந்து காவலரைத் தாக்கி, அவரது கையை உடைத்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இருவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    தஞ்சாவூர் – மயிலாடுதுறை சாலையை இணைக்கும் முக்கியப் பகுதியான கும்பகோணம் நால்ரோடு சந்திப்பில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கோவில் திருவிழாவிற்காகப் பேனர்கள் வைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்திற்கு முற்றிலும் இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையின் குறுக்கே இந்தப் பேனர்கள் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    அப்போது அந்தப் பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தேவேந்திரன், போக்குவரத்தைச் சரிசெய்யும் நோக்கில் சாலையின் குறுக்கே இருந்த பேனர்களை அகற்றுமாறு அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார். மேலும், பேனர்களை அகற்ற அவரே முயன்றதாகவும் தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த தவெக வார்டு உறுப்பினர்களான அருண் மற்றும் காளி  ஆகிய இரு இளைஞர்களும் காவலர் தேவேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காவலர் தேவேந்திரனின் வலது கை மணிக்கட்டு பகுதியில் பலத்த எலும்பு முறிவு  ஏற்பட்டது.

    தாக்குதலைத் தொடர்ந்து, இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். படுகாயமடைந்த காவலரை மீட்ட சக போலீசார், அவரை சிகிச்சைக்காகக் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தார். தீவிரத் தேடுதலுக்குப் பின் தலைமறைவாக இருந்த காளி என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். போலீசாரின் பிடி இறுகுவதை உணர்ந்த மற்றொரு குற்றவாளியான அருண், கும்பகோணம் நீதிமன்றத்தில் நேராகச் சென்று சரணடைந்தார்.

    நீதிமன்ற உத்தரவின்படி, கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தற்போது சிறையில் அடைத்துள்ளனர். காவலர் மீதான இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleMI கேப்டன் மாற்றம் உறுதியாகிறதா? ரோகித் ஆலோசனையில் அணியின் எதிர்காலம்!
    Next Article மக்கள் பிரதிநிதிகளுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
    Editor web3
    • Website

    Related Posts

    கிரீன்வேஸ் சாலையில் 22 அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள்..!! அரசாணை வெளியீடு..!!

    May 30, 2026

    ரூ.9 கோடி மதிப்பிலான மேம்பாலம் வீண்!. 7 கி.மீ இணைப்பு சாலைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

    May 30, 2026

    இனிமே இப்படித்தான் – மின்சாரத்துறை டெண்டர் குறித்து ஆராய மூன்று குழுக்கள் அமைப்பு  

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கிரீன்வேஸ் சாலையில் 22 அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள்..!! அரசாணை வெளியீடு..!!

    ரூ.9 கோடி மதிப்பிலான மேம்பாலம் வீண்!. 7 கி.மீ இணைப்பு சாலைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

    இனிமே இப்படித்தான் – மின்சாரத்துறை டெண்டர் குறித்து ஆராய மூன்று குழுக்கள் அமைப்பு  

    தமிழக நிதிநிலை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை..!! அமைச்சர் மரிய வில்சன் தகவல்..!!

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    அஜித்குமார் தாயார் மரணம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.