Close Menu
    What's Hot

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!
    Featured

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    Editor web3By Editor web3May 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Attempted Murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் சிறுவன் உட்பட மூன்று பேரை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை அறுபத்துமூவர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், கவியரசன் (14) என்ற மகனும் உள்ளனர்.

    இன்று காலை கற்பகம் வீட்டின் அருகே உள்ள பொதுக் குழாயில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்வீட்டில் வசிக்கும் திமுக பெண் கவுன்சிலர் ஜெயலட்சுமி முருகனின் மகன் அசோக் (25) என்பவருடன் பழைய பகை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அசோக் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கற்பகத்தை கொடூரமாக வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது கணவர் செல்வம் மற்றும் மகன் கவியரசன் ஆகியோரையும் அசோக் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் சரிந்த மூவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த கற்பகத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதற்கிடையில், தாக்குதல் நடத்திய அசோக் நேராக மயிலாடுதுறை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இந்தத் துணிகரத் தாக்குதல் சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோதலுக்கான உண்மையான பின்னணி என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
    Next Article 5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!
    Editor web3
    • Website

    Related Posts

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    May 31, 2026

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.