Close Menu
    What's Hot

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!
    தமிழ்நாடு

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    Editor web1By Editor web1May 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani10112021m
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்பி, படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், “மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள புதிய காலியிடங்களையும் சேர்த்து, ஒட்டுமொத்த அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தைக் கடந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தையே நிலைகுலையச் செய்து விடும்.

    20 ஆண்டுகளாகத் தொடரும் அலட்சியம்

    தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் மொத்தம் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. கடந்த காலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சியாளர்கள் முறையான நடவடிக்கை எடுக்காததே இந்த அவல நிலைக்குக் காரணம்.

    ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் வெறும் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.

    எட்டாக்கனியான வேலை

    அரசுப் பணிகளுக்குப் போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது தற்போதைய சூழலில் எட்டாக்கனியாகிவிட்டது.

    2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மொத்தம் 5.50 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கப் போவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தங்களின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலைகளை வழங்கியது. தற்காலிக, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக அளித்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

    தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு, “அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும்” என்று வாக்குறுதி அளித்திருக்கிறது.

    எனவே, பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் பெரும் விரக்தியில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில், இந்த அரசுத்துறை காலியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!
    Next Article இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    May 31, 2026

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    May 31, 2026

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.