Close Menu
    What's Hot

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
    இந்தியா

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய கடற்படையின் 27-வது புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் (மே 31) ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அதிவேகமாக மாறிவரும் பிராந்திய கடல்சார் பாதுகாப்புச் சூழல்களுக்கு மத்தியில் அவர் இந்த உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார். இதுவரை கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கிருஷ்ணா சுவாமிநாதன் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 2028, டிசம்பர் 31 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    4 16

    பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், “இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்புச் சூழல் சவாலானதாகவும், சிக்கலானதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறி வருகிறது. நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதார நலன்களையும் காக்க இந்திய கடற்படை எப்போதும் விழிப்புடன் செயல்படும். கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் போர் திறனை உச்சக்கட்டத்தில் வைத்திருப்பதே எனது முதன்மையான முன்னுரிமை.” என தெரிவித்தார்.

    மேலும், நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தி இந்திய கடற்படையை மேலும் நவீனமயமாக்கவும், ‘சுயசார்பு இந்தியா’ (Atmanirbharata) திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் பாடுபடப்போவதாக அவர் உறுதியளித்தார்.

    1987-ம் ஆண்டு ஜூலை 1 அன்று இந்திய கடற்படையில் இணைந்த இவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர்முறையில் நிபுணத்துவம் பெற்றவர். இதற்கு முன்னதாக மேற்கு மண்டல கடற்படை பிரிவின் தலைமைத் தளபதியாகவும், கடற்படையின் துணைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

    3 19

    ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல், வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் மைசூர், ஐஎன்எஸ் குலிஷ் உள்ளிட்ட முக்கியப் போர்க்கப்பல்களை வழிநடத்திய பெருமை இவருக்கு உண்டு.

    தேசியப் பாதுகாப்பு அகாதமி முன்னாள் மாணவரான அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், சர்வதேச ஆய்வுகளில் முனைவர் (Ph.D) பட்டம் பெற்றவர். இவரது மிகச்சிறந்த சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு ‘பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம்’ (PVSM), ‘அதி விஷிஷ்ட் சேவா பதக்கம்’ (AVSM) மற்றும் ‘விஷிஷ்ட் சேவா பதக்கம்’ (VSM) ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!
    Next Article “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    May 31, 2026

    கவனம்!. குர்குரே சாப்பிட்ட போது மூச்சுத்திணறல்!. இளைஞர் பரிதாப மரணம்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.