தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திருமணமாகி குழந்தைகள் வந்த பிறகும் கூட, சினிமாவில் கோலோச்சி நிற்கிறார் நயன்தாரா. அதேப் போல சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரையும் பெற்றிருந்தார் நயன் தாரா.
தற்போது அந்த பெருமையை ஓவர் டேக் செய்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட திரைப்படங்கள் மூலம் தனது திரையுலகில் பயணத்தை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார். பான் – இந்தியா கிரஷ் என அன்போடு அழைக்கப்படும் ராஷ்மிகா, திருமணத்திற்கு பிறகும் கூட பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது அவர் இந்தி திரைப்படமான காக்டெயில் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாஹித் கபூர் கதாநாயகனாக நடிக்க, கிரித்தி சனோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக ராஷ்மிகா ரூ.15கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் சல்மான் கான் ஜோடியாக நடித்து வரும் நயன் தாரா ரூ.10கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சம்பளம் விஷயத்தில் நயன் தாராவை ராஷ்மிகா முந்தியுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
