Author: Editor web4
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவைகளில் ஒன்றாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னனி வீர, வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்று தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் சபலென்காவும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா, 7-5, 6-3, என்ற செட் கணக்கில் ஒசாகாவை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் சபலென்கா, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதவுள்ளார்.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்று வரையிலும் சினிமாவில் காலோச்சி நிற்பவர். சமீபத்தில் இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த கருப்பு திரைப்படம் ரூ.180கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர் ஹிட்களை கொடுத்து வரும் திரிஷா அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தற்போதைய முதலமைச்சர் விஜய்யுடன் அவர் அடிக்கடி பொது இடங்களுக்கு சென்று வருவதால், அவரை நெட்டிசன்கள் பல கேலி, கிண்டல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர். குறிப்பாக விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது திரிஷா கலந்து கொண்டு கண்ணீர் வடித்தது, மனைவியுடன் விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருப்பதாக செய்தி வெளியானதும், திருமணம் ஒன்றிற்கு இருவரும் சேர்ந்து சென்றது, சமீபத்தில் அஜித்குமாரின் தாயார் இறப்பிற்கு இருவரும் சேர்ந்து சென்றது என பல விஷயங்களில் திரிஷாவை பலரும் பலவிதமாக…