தமிழக ஆளுநர் திரு.ராஜேந்திர அர்லேகர் தனது மனைவியுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் , ஏகாம்பரநாதர் கோயில்களில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், தனது மனைவியுடன் ஒரு நாள் பயணமாக நேற்று மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.
சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு காஞ்சி காமாட்சி அம்மன் குங்குமம் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் புகைப்படங்கள் ஆகியவை கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார். திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நிலா திங்கள் துண்ட பெருமாளை தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மஹாஸ்வாமி பிருந்தாவனத்தில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். அதன்பின் விஜேயந்திர சரஸ்வதி சாமிகள், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். ஆளுநருக்கு வரவேற்பின் போது ஏலக்காய் மாலை அணிவித்து நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் விஜியேந்திரர் ஆளுநருக்கு மார்பில் கற்களால் செய்யப்பட்ட ஆதிசங்கரர் சிலையை பரிசாக வழங்கினார். காஞ்சி சங்கர மடத்தின் கல்வி மற்றும் பிற துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு செய்யப்படும் திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.
