Close Menu
    What's Hot

    RSS தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு..!! பெரும் பரபரப்பு..!!

    சிறுவனை கொன்று பண்ணையில் புதைத்த ஓனர்!. 4 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

    பெண்களுக்கு எதிரான கொடுமைகள்.. அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது..!! தவெக அதிரடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»வாங்குன கடனை கட்ட முடியல..!! கண்ணீருடன் மா மரங்களை வெட்டி வீசியெறியும் விவசாயி..!!
    Featured

    வாங்குன கடனை கட்ட முடியல..!! கண்ணீருடன் மா மரங்களை வெட்டி வீசியெறியும் விவசாயி..!!

    editor5By editor5June 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 06 12 at 11.03.04 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்கிகளில் பெற்ற கடனை அடைக்க 100 ஆண்டு பழமையான மா மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளார் விவசாயி ஒருவர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயம் பல தலைமுறைகளாக விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாகவும், பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கடுமையான பருவநிலை மாற்றங்கள், கட்டுப்படுத்த முடியாத பூச்சித் தாக்குதல்கள் மற்றும் வரண்டு போகும் மழைப்பொழிவு போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இதனால், முன்பு 41,000 ஹெக்டேர் பரப்பளவில் செழித்து வளர்ந்த மா தோட்டங்கள் தற்போது 33,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளன. இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் தங்கள் குடும்பத்தை ஓட்டி வருகின்றனர்.

    ஆண்டுக்கு ஆண்டு சுமார் 5 சதவீத விவசாயிகள் மா மரங்களை அழித்துவிட்டு மாற்றுப் பயிர்களுக்கு மாறுவதால், இன்னும் 10 ஆண்டுகளுக்குள் மாவட்டத்தில் மா விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை விவசாய சமூகத்தை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தகைய சூழலில், போச்சம்பள்ளி அருகே உள்ள பாப்பானூர் கிராமத்தைச் சேர்ந்த மா விவசாயி பழனிசாமி, வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். வேறு வழியின்றி தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் உள்ள நூறு ஆண்டுகள் பழமையான மா மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, மாவட்டத்தின் பாரம்பரிய விவசாயத்திற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பழனிசாமி கண்ணீர் மல்கக் கூறுகையில், “தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கூட்டுறவு மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அதை நிறைவேற்றவில்லை. வங்கிகள் தொடர்ந்து வற்புறுத்தியதால், கடனை அடைக்க இந்தக் கடும் முடிவுக்கு வர வேண்டியதாயிற்று” என்றார். இந்தச் சம்பவம் மாவட்டம் முழுவதும் உள்ள மா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழக முதல்வர் விஜய் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மா விவசாயிகளுக்கென தனி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, பூச்சி மற்றும் பருவநிலை தாக்குதல்களை எதிர்கொள்ள உதவும் தொழில்நுட்ப ஆதரவு, கடன் தள்ளுபடி, மானியங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மா விவசாயத்தைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்பது விவசாய அமைப்புகளின் எச்சரிக்கை. பாரம்பரியப் பயிரான மாவைப் பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதுப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவான் ஜஸ்பால் ராணா மறைவு!. பதக்கங்களை வேட்டையாடிய ஒரு சகாப்தத்தின் கதை!
    Next Article அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து..!! 8 வாரங்களில் பதில் வேண்டும்..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!
    editor5

    Related Posts

    RSS தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு..!! பெரும் பரபரப்பு..!!

    June 12, 2026

    சிறுவனை கொன்று பண்ணையில் புதைத்த ஓனர்!. 4 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

    June 12, 2026

    பெண்களுக்கு எதிரான கொடுமைகள்.. அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது..!! தவெக அதிரடி..!!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    RSS தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு..!! பெரும் பரபரப்பு..!!

    சிறுவனை கொன்று பண்ணையில் புதைத்த ஓனர்!. 4 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

    பெண்களுக்கு எதிரான கொடுமைகள்.. அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது..!! தவெக அதிரடி..!!

    திராவிட மாடல் வளர்ச்சிக்கு ‘Sofa Model’ ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா முதல்வர்? உதயநிதி ஸ்டாலின் விளாசல்..!!

    மறுக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி… திறக்கப்படாத மேட்டூர் அணை… விவசாயிகளை வீதிக்கு தள்ளிய விடியா அரசு!. இபிஎஸ் அட்டாக்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.