Close Menu
    What's Hot

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    ஜனநாயகத்தை அழிக்கவே முக்கிய பதவிகளில் ஆதரவாளர்கள் நியமனம்: பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜூன கார்கே கடும் சாடல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பூரண கும்ப மரியாதையுடன்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்..!!
    Featured

    பூரண கும்ப மரியாதையுடன்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்..!!

    editor5By editor5June 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 34 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொல்லூர் மூகாம்பிகை கோவில் நிர்வாகம் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

    டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சிறப்பு தரிசனம் செய்தார். நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் டெல்லியில் தங்கியிருந்த முதலமைச்சர், இன்று மதியம் தனி விமானம் மூலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் செல்லும் பாதையில் கார் மூலம் பயணித்தார்.

    மூகாம்பிகை அம்மன் கோயிலைச் சென்றடைந்த முதலமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அம்மன் சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்து, பிரார்த்தனை நடத்தினார். தரிசனம் முடிந்ததும் முதலமைச்சர் விஜய் மங்களூர் விமான நிலையம் திரும்பி, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்ல உள்ளார். இந்தப் பயணத்தையொட்டி தமிழக போலீசார் கர்நாடக போலீசாருக்கு சிறப்பு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதன்படி உடுப்பி மாவட்ட போலீசார் கோயில் வளாகம், சுற்றுப்பகுதிகள் மற்றும் பயணப் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர். முதலமைச்சர் பயணிக்கும் சவுபர்ணிகா ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணிக்க வனத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையம், கோயில் அணுகு பாதைகள் உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கொல்லூர் மூகாம்பிகை கோயில் தென்னிந்தியாவின் மிக முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் இங்கு தொடர்ந்து வருகை தருகின்றனர். அரசியல் தலைவர்கள் மத்தியில் இந்தக் கோயிலுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோர் இங்கு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தியுள்ளனர்.

    ஆன்மிக அமைதி, ஜோதிட நம்பிக்கை மற்றும் அரசியல் ரீதியான சில மரபுகள் ஆகியவை அரசியல் பிரமுகர்களை இந்தக் கோயிலுக்கு இழுக்கும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. முதலமைச்சர் விஜயின் இந்தத் திடீர் தரிசனப் பயணம் அரசியல் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுழந்தைகளிடம் வேகமாக பரவும் ஷிகெல்லா வைரஸ்!. பரவும் விதம், அறிகுறிகள், சிகிச்சை,  தடுப்பு முறைகள் இதோ!
    Next Article தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறல்!- அண்ணாமலை கண்டனம்
    editor5

    Related Posts

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    June 12, 2026

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    June 12, 2026

    ஜனநாயகத்தை அழிக்கவே முக்கிய பதவிகளில் ஆதரவாளர்கள் நியமனம்: பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜூன கார்கே கடும் சாடல்!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    ஜனநாயகத்தை அழிக்கவே முக்கிய பதவிகளில் ஆதரவாளர்கள் நியமனம்: பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜூன கார்கே கடும் சாடல்!

    நயினாருக்கு ‘கல்தா’?… அமித்ஷா முடிவின் பின்னணி… புதிய தலைவர் யார்?

    சென்னை: இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம்..! ஜாமின் கேட்டு குற்றவாளிகள் இருவர் மனு தாக்கல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.