மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதின. இலங்கைக்கு எதிரான இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை டேனி வயட் ஹாட்ஜ் அபாரமாக விளையாடி 105 ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.
இதன்மூலம், மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற புதிய சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, 2023-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி எடுத்த 213 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனையையும் இங்கிலாந்து அணியே முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
220 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 132 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
