Close Menu
    What's Hot

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அதிமுக தொண்டர்களே.. தவெகவினரிடம் ஜாக்கிரதையா இருங்க..!! ஆர்.பி.உதயகுமார் வார்னிங்..!!
    Featured

    அதிமுக தொண்டர்களே.. தவெகவினரிடம் ஜாக்கிரதையா இருங்க..!! ஆர்.பி.உதயகுமார் வார்னிங்..!!

    editor5By editor5June 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 20 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதல்வர் விஜய் சிலரை பலகாலம் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (த.வெ.க.) அரசு பல்வேறு துறைகளில் தோல்வியடைந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இரண்டரை ஆண்டுகளில் கட்சியைத் தொடங்கி 35 சதவீத வாக்குகளைப் பெற்ற விஜய்யின் வெற்றியைப் பாராட்டும் அதேவேளையில், 65 சதவீத மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இன்று வெளியிட்ட அறிக்கையில் உதயகுமார் கூறியுள்ளதாவது, “விஜய்யிடம் சேர வாசலில் ஆள் காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் விஜய்யை நேரில் பார்ப்பதே அரிது. இது ஜனநாயகத்துக்கு அழகா?” என்று கேள்வி எழுப்பினார். சினிமா கவர்ச்சி மற்றும் வசீகரத்தால் கிடைத்த வெற்றி நிரந்தரமல்ல என்றும், 35 சதவீத வாக்காளர்களிடம் இந்த வசீகரம் எப்போதும் தாக்குப்பிடிக்காது என்றும் எச்சரித்தார். மேலும், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி, தடையில்லா மின்சாரம் வழங்கல், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் விஜய் அரசு முழுமையாகத் தோல்வியுற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

    “தமிழகம் முழுவதும் இந்த அரசுக்கு எதிராகப் போராட்டக் களமாக மாறியுள்ளது. சிலரை நீண்ட காலம் ஏமாற்றலாம், பலரை சிறிது காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது,” என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக, சனிக்கிழமை தோறும் அ.தி.மு.க. தொண்டர்களை இலக்கு வைத்து ‘ஆள் பிடிக்கும்’ நடவடிக்கை நடைபெறுவதாகக் குற்றம் சாட்டிய உதயகுமார், “தூண்டிலில் புழு வைத்து மீன் பிடிப்பது போல இவர்கள் செயல்படுகின்றனர். அது மீனை வாழ வைக்க அல்ல, சாப்பிடவே” என்ற உவமையுடன் எச்சரித்தார்.

    அ.தி.மு.க. விசுவாசத் தொண்டர்கள் இதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், உதயகுமாரின் இந்தக் கருத்துகள் அ.தி.மு.க.வினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை முடிவடைகிறது மீன்பிடி தடைக்காலம்..!! கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்..!!
    Next Article இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்துக்கு புதிய வலுச்சேர்க்கை: மெண்டராக வருவாரா தோனி?
    editor5

    Related Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    June 19, 2026

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    June 19, 2026

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    தவெகவில் இணைவா..?? ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க..!! பங்கம் செய்த செல்லூர் ராஜு..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.