Close Menu
    What's Hot

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!
    Featured

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    Editor web4By Editor web4June 15, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 20260615 133459
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 2 மாத பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்காக பெற்ற தாயே விற்றதும், சினிமா பாணியில் கைமாறிய குழந்தையை நாமக்கலில் போலீசார் மீட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு , தரைகாடு பகுதியை சேர்ந்தவர் மாற்றுத் திறனாளியான ஷபீர். இவரது மனைவி ஜபீனா திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் ஜபீனாவை ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு காயிதேமில்லத் தெருவை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான அயூப் மகன் ரஷித் அஹ்மத் என்பவர் அணுகி, நீயே பிச்சை எடுத்து கஷ்டப்பட்டு வருகிறாய். அதனால் உன்னுடைய குழந்தையை என்னிடம் கொடுத்து விடு அதற்கு உனக்கு பணம் தருகிறேன்’ எனக்கூறி சம்மதிக்க வைத்துள்ளார்.

    பின்னர், கடந்த மாதம் 20ம் தேதி நரியம்பட்டில் ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அந்த பெண் குழந்தையை வாங்கி உள்ளார். அந்த பெண்ணும் தனக்கு பணம் கிடைத்தவுடன் அந்த குழந்தையை விற்றுள்ளார். பின்னர் ரஷித் அஹ்மத் அந்த குழந்தையை வேலூரில் உள்ள புகழேந்தி என்பவருக்கு அதிக விலைக்கு விற்றதாக தெரிகிறது. மேலும் ஷபீர் தனது குழந்தை பற்றி ஜபீனாவிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு குழந்தையுடன் வந்தால் என்னுடன் வாழ முடியும். இல்லாவிட்டால் சென்று விடு என மனைவியை கண்டித்துள்ளார்.

    இதனால் ஜபீனா மீண்டும் ரஷீத்தை அணுகி தனது குழந்தையை தந்து விடுமாறும் பணத்தை திருப்பிதருவதாகவும் கூறி உள்ளார். ஆனால், ரஷீத் பல நாட்க ளாகியும் குழந்தையை தராமல் அலைகழித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜபீனா குழந்தையை மீட்டு தரும்படி உம்ராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் எஸ்பி அக்ஷய் அனில் வாகரே உத்தரவின் பேரில், போலீசார் தீவிரமாக அந்த பெண் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுகபிரியா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    அதன்பேரில் குழந்தையை விற்றதாக ஜபீனா, பணம் கொடுத்து வாங்கி விற்று இடைத்தரகராக வேலை செய்த ரஷித் அஹ்மத் ஆகிய இருவரையும் போலிசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த பெண் குழந்தையை மீட் கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு தம்பதிக்கு அந்த குழந்தை விற்கபட் டது தெரியவந்து போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு சதீஷ்குமார், ஹரிணி தம்பதியிடம் இருந்த அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும், இது தொடர் பாசு இதில் மூளையாக செயல்பட்ட ஆம்பூரை சேர்ந்த கார் டிரைவரான வேலூரில் தற்போது வசித்து வரும் புகழேந்தி(41), ஈரோடு அடுத்த பெருந்துறையை சேர்ந்த யுவராஜ் மனைவி உமா மகேஸ்வரி(42) ஆகியோர் நேற்று மாலை உம்ராபாத் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு வந்த எஸ்பி அக்ஷய் அனில் வாகரே விசாரணை மேற்கொண்டார் தொடர்ந்து குழந்தை கடத்தல், விற்பனை ஆகியவற்றில்ஈடுபட்டதாக உமா மகேஸ்வரி, புகழேந்தி, சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி ஹரிணி ஆகி யோரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின அதில் ஆம்பூரில் கட்டிட மேஸ்திரியாக பணி புரிந்து வந்த ரஷீத் அஹ்மத் என்பவர் கார் டிரைவரான வேலூர் வசந்தபுரத்தில் வசித்து வரும் புகழேந்தி (41) என்பவருடன் நட்பில் இருந்துள்ளார். புகழேந்தி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வட்டகாரபாளையம் அருகே அய்யன் தோட்டத்தை சேர்ந்த யுவராஜ் மனைவி உமாமகேஸ்வரி(42) என்பவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் மகேஸ்வரியின் உறவினரான திருமண புரோக்கராக உள்ள ரமேஷ் என்பவர் தனக்கு தெரிந்த ஒரு தம்பதி கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாமல் தவித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷீத் அஹ்மத் தான் குழந்தை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். பின்னர் ரூ.50 ஆயிரத்திற்கு ஜபீனாவின் குழந்தையை வாங்கி புகழேந்தி மூலம் உமா மகேஸ்வரியிடம் கொடுத்துள்ளார்.

    உமா மகேஸ்வரியின் உறவினரான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த அலாவுதீன் என்பவரது மூலமாக அந்த தம்பதியரிடம் குழந்தை பற்றி பேசி உள்ளனர். அதற்காக வியாபாரம் பேசி தம்பதியிடம் ரூ.13 லட்சத்தை அலாவுதீன் வாங்கி உள்ளதாக தெரிகிறது. பின்னர், அந்த குழந்தை சதீஷ்குமார் தம்ப தியிடம் ஒப்படைக்கபட் டுள்ளது. பின்னர், அந்த குழந்தையின் இருப்பிடம் அறிந்து அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர். இதில் தொடர்புடைய உமா மகேஸ்வரி, புகழேந்தி, தம்பதி உள்ளிட்ட நான்கு பேர் உட் பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய் துள்ளனர் மேலும், பணம் பெற்று மூளையாக செயல்பட்ட அலாவுதீனையும் போலீசார் மடக்கி பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!
    Next Article அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!
    Editor web4

    Related Posts

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    June 21, 2026

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    June 21, 2026

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.