Close Menu
    What's Hot

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?
    Featured

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    Editor web1By Editor web1June 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 06 21 18h13m37s318
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை முன்பு, சிலரை குறிப்பிட்டு விமர்சித்து வைக்கப்பட்ட பேனரால் உட்கட்சி பூசல் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிருப்தி குழுவினர் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகிறது. அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுக ஒரு குடும்பத்தின் கைக்குள் செல்வதாகவும், கட்சியில் கேள்வி கேட்கும் சூழல் இல்லை என்றும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான ‘எம்ஜிஆர் மாளிகை’ முன்பு வைக்கப்பட்ட பேனர் ஒன்று கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேனரில் ஒரு குள்ளநரி செய்தியாளரை சந்திப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதில், “குடிகார குள்ளநரி அன்று கும்பலாக ஊளையிட்டது, இன்று அனாதையாக வந்து ஓலமிடுகிறது” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், “எத்தனை குடிகார குள்ளநரிகள் ஊளையிட்டாலும், சிங்கத் தமிழர் எடப்பாடி பழனிசாமியின் முன் குள்ளநரிகளின் ஊளை எடுபடாது” என்றும் அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவம் அதிமுகவின் உட்கட்சி பூசல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதையே காட்டுகிறது. ஏற்கனவே கட்சியின் தலைமை மற்றும் கொள்கை முடிவுகள் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், தலைமை அலுவலகத்திற்கு முன்பே இத்தகைய பேனர் வைக்கப்பட்டது கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleFIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு
    Next Article போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!
    Editor web1
    • Website

    Related Posts

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    June 21, 2026

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    June 21, 2026

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.