Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!
    இந்தியா

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Editor web1By Editor web1June 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bi 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பீகாரில் போலி என்கவுன்டரில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்.

    பீகாரில் போஜ்பூர் மாவட்டம் ஷாப்பூர் காவல் நிலையப் பகுதியில் ஜூன் 17ம் தேதி பாரத் பூஷன் திவாரி (28) என்ற இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையையும், பீகார் அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது போலி என்கவுன்டர் என்று கூறி குடும்பத்தினரும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றப் பின்னணி இல்லாத நபர் கொல்லப்பட்ட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  துப்பாக்கியை வைத்துக் கொண்டு பூஷன் திவாரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ தொடர்பான விசாரணைக்கு சென்ற போது போலீசார் மீது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், தற்காப்புக்காக சுட்டதில் பூஷன் திவாரி உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    இதனிடையே என்கவுன்டர் சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையின் நோக்கம், சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் முழுமையான நடுநிலை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் ஆராய்வதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பூஷன் திவாரி என்கவுன்டர் மரணத்தின் உண்மைத்தன்மை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதுபோன்ற போலி என்கவுன்டர்கள் சாதியின் அடிப்படையில் நடத்தப்படுவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் முழுமையான விசாரணையை வலியுறுத்திப் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது தடியடியும் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?
    Next Article அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்
    Editor web1
    • Website

    Related Posts

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    June 21, 2026

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    June 21, 2026

    சிம்லாவில்  சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் ; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.