Close Menu
    What's Hot

    அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

    PF அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா..?? 3 நாட்களுக்கு இது கிடையாதாம்..!! EPFO அறிவிப்பு..!!

    ஃபிஃபா அப்டேட் : திரில் வெற்றி பெற்ற துருக்கி..! அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!
    Featured

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    editor5By editor5June 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 17 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெ.சண்முகம் களமாடியதும், போராடியதும் ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    முரசொலி நாளிதழில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பெ.சண்முகம் குறித்து வெளியான செய்தியை வன்மையாகக் கண்டித்துள்ளார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன். அந்த செய்தி அநாகரிகத்தின் உச்சம் என்று விமர்சித்த அவர், அரசியல் விவாதங்கள் நாகரிக எல்லைக்குள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    “தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அர்ப்பணித்த மாமனிதர் பெ.சண்முகம். காவேரி கரையோரத்தில் பிறந்த அவர், சிவப்புத் துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தவர். அவரது பங்களிப்பை ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது. ஒரு மனிதன் ஒரு ஆயுளில் செய்யக்கூடியதை விட அதிகமாக அவர் சாதித்துள்ளார்” என்று புகழ்ந்த அமைச்சர், அத்தகைய தலைவரை அவமதிக்கும் வகையில் முரசொலி எழுதியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

    “அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவை மரியாதைக்குரிய எல்லைக்குள் இருக்க வேண்டும். டானிக் குடித்து வளர்ந்தவர் என்று எழுதியிருப்பது மிகவும் மோசமான அணுகுமுறை. திமுகவினர் டாஸ்மாக் டானிக் குடித்து வளர்ந்தவர்கள் என்பது போன்ற கேலியும், அவதூறும் நாகரிக அரசியலுக்கு ஒவ்வாதவை” என்று சாடினார். கலைஞர் மு.கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் இத்தகைய எழுத்தை தீவிரமாகக் கண்டித்திருப்பார் என்று குறிப்பிட்ட ராஜ்மோகன், “நாகரிக அரசியலை நோக்கி அனைவரும் திரும்ப வேண்டும். சி.வி.சண்முகம் அவர்கள் அதிமுக அரசியலில் தீவிரமாக உள்ளார்.

    அவரைப் பயன்படுத்தி பெ.சண்முகத்தை சிறுமைப்படுத்த முரசொலி முயல்வது பெரும் வன்மத்தை வெளிப்படுத்துகிறது. இருவரையும் ஒப்பிடுவதன் மூலம் பெ.சண்முகத்தின் பங்களிப்பை அவமதிப்பதாகும்” என்றார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்தச் செய்தியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் அறிவித்தார். “சிவப்புத் துண்டை இவ்வாறு அவமானப்படுத்தினால், இரட்டைப் போர் யானை மௌனம் காக்காது. ஒன்று, இரண்டு, மூன்று என்று சிந்துபாத் கதை போல வன்மத்தை கக்குவது அரசியல் நாகரிகத்துக்கு அழகல்ல” என்று எச்சரித்தார்.

    அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் ஆரோக்கியமான விவாதங்களாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் தாக்குதல்களாக மாறக்கூடாது என்பது அமைச்சரின் தெளிவான செய்தியாகும். மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்பு அரசியல்வாதிகள் அனைவரிடமும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    minister rajmohan p shanmugam
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??
    Next Article மீண்டும் தலைதூக்கும் DMK Files விவகாரம்..!! டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை..!!
    editor5

    Related Posts

    அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

    June 26, 2026

    PF அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா..?? 3 நாட்களுக்கு இது கிடையாதாம்..!! EPFO அறிவிப்பு..!!

    June 26, 2026

    ஃபிஃபா அப்டேட் : திரில் வெற்றி பெற்ற துருக்கி..! அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சி..!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

    PF அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா..?? 3 நாட்களுக்கு இது கிடையாதாம்..!! EPFO அறிவிப்பு..!!

    ஃபிஃபா அப்டேட் : திரில் வெற்றி பெற்ற துருக்கி..! அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சி..!

    வாடகைத் தாய் வழக்குகள்: உயர் நீதிமன்றம் ’காலக்கெடு’!

    மீண்டும் தலைதூக்கும் DMK Files விவகாரம்..!! டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.