Close Menu
    What's Hot

    தமிழக பட்ஜெட் எப்போது? ஜூலை 2 முதல்  விஜய் தொடர் ஆலோசனை!

    நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்..!! இதெல்லாம் பயன்படுத்த தடை..!! கமிஷனர் வார்னிங்..!!

    அடம்பிடிக்கும் சி.விஜயபாஸ்கர்..!! தள்ளிப்போகும் இணைப்பு விழா..!! காரணம் இதுதானாம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!
    Featured

    அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

    editor5By editor5June 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 20 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21-ம் தேதி இரவு நிகழ்ந்த இந்த விபத்தில், அங்கு பணியாற்றிய வட மாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் உள்பட 74 பேர் மயக்கமடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    உடனடியாக மீட்கப்பட்டவர்கள் திருவள்ளூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் 10 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மேலும் சிலர் உயிரிழந்தனர்.

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரீட்டா ஜுஜிங்கா (28) மற்றும் பிங்கி ஜுஜிங்கா (21) ஆகியோரும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமித்ரா ஜிங்கா (22) ஆகியோரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்ந்தது. இதையடுத்து, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரீத்தி தேவி என்பவரும் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 14 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த அனைவரும் வட மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மஞ்சங்காரணை தனியார் மருத்துவமனையில் இருந்து 13 பேரும், செங்குன்றம் அருகே நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து 8 பேரும் என மொத்தம் 21 பெண் தொழிலாளர்கள் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்போது கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மாநிலமான அசாம் அரசின் பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர்.

    குழுவின் மூத்த ஆலோசகர் சுராஜித் போர்வா தலைமையில் 5 பேர் கொண்ட குழு மஞ்சங்காரணை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 16 தொழிலாளர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது. சிகிச்சை முறைகள், மருத்துவ வசதிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய சுராஜித் போர்வா, “தமிழ்நாடு அரசு வழங்கும் தீவிர சிகிச்சை மற்றும் ஒத்துழைப்புக்கு அசாம் மாநில அரசின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். குணமடைந்து முகாமுக்கு திரும்பியவர்களை சந்தித்த பிறகு தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

    இந்த சம்பவம் தொழிற்சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தொழிலாளர் நலன் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ammonia gas leak tiruvallur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticlePF அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா..?? 3 நாட்களுக்கு இது கிடையாதாம்..!! EPFO அறிவிப்பு..!!
    Next Article இனி அரசு மருத்துவமனைகளில் கால்கடுக்க நிற்க வேண்டாம்..!! ஆன்லைனில் ஈசியாக பெறலாம் OP சீட்டு..!!
    editor5

    Related Posts

    தமிழக பட்ஜெட் எப்போது? ஜூலை 2 முதல்  விஜய் தொடர் ஆலோசனை!

    June 26, 2026

    நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்..!! இதெல்லாம் பயன்படுத்த தடை..!! கமிஷனர் வார்னிங்..!!

    June 26, 2026

    அடம்பிடிக்கும் சி.விஜயபாஸ்கர்..!! தள்ளிப்போகும் இணைப்பு விழா..!! காரணம் இதுதானாம்..!!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக பட்ஜெட் எப்போது? ஜூலை 2 முதல்  விஜய் தொடர் ஆலோசனை!

    நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்..!! இதெல்லாம் பயன்படுத்த தடை..!! கமிஷனர் வார்னிங்..!!

    அடம்பிடிக்கும் சி.விஜயபாஸ்கர்..!! தள்ளிப்போகும் இணைப்பு விழா..!! காரணம் இதுதானாம்..!!

    திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா?

    மாரத்தான் ஓகே..!! அந்த குட்டி GIFT BAG-ல என்ன இருந்துச்சு..?? கவனிச்சிங்களா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.