ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குளோபல் ஸ்கில்ஸ் சேலஞ்ச் ஆஸ்திரேலியா 2026 போட்டியில் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
ஜூன் 23 முதல் 29 வரை நடைபெற்ற இந்த சர்வதேச திறன் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 போட்டியாளர்கள், நிபுணர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் Additive Manufacturing பிரிவில் கர்நாடகவின் பவன் பத்ராவதி சுரேஷா, – Cloud Computing பிரிவில் டெல்லியை சேர்ந்த மௌசம் குமார் கிரி, – Health and Social Care பிரிவில் டெல்லியைச் சேர்த விஷ்ணுப்ரியா சுனில் ஆகியோ தங்கப்பதக்கங்களை வென்றனர்.
3D Digital Game Art பிரிவில் மகாராஷ்டிராவின் ஹர்ஷ் ரமேஷ் வெள்ளிப் பதக்கமும், Painting and Decorating பிரிவில் ஹரியானவின் முஸ்கான்–வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இந்த வெற்றி, மேம்பட்ட உற்பத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், படைப்பாற்றல் துறைகள் மற்றும் சேவைத் திறன்களில் இந்திய இளைஞர்களின் உலகளாவிய போட்டித்திறன் உயர்ந்து வருவதை எடுத்துக்காட்டுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, “3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என இந்திய அணி வென்றிருப்பது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் சாதனை. இது போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில் துறை பங்குதாரர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த அனுபவம், இந்த ஆண்டு ஷாங்காயில் நடைபெறவுள்ள 48-வது WorldSkills போட்டிக்கான எங்கள் தயாரிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது,” என்று கூறினார்.
15 போட்டியாளர்கள் மற்றும் 15 நிபுணர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட இந்திய அணி, 15 திறன் பிரிவுகளில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது. உலகத் தர மதிப்பீட்டு முறையின்படி நடைபெற்ற இந்தப் போட்டி, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இந்திய இளைஞர்களின் தொழில்திறனை மேலும் மேம்படுத்த உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்தப் பங்கேற்பு, Skill India Mission திட்டத்தின் ஒரு பகுதியாகும். உலகத் தரம் வாய்ந்த திறன்மிக்க மனித வளத்தை உருவாக்கி, இந்திய இளைஞர்களை உலகின் சிறந்த திறனாளர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
