Close Menu
    What's Hot

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»2026 புதிய ரேஷன் கார்டு: 6 லட்சம் விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்புக்கு அரசு விளக்கம்..!!
    Featured

    2026 புதிய ரேஷன் கார்டு: 6 லட்சம் விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்புக்கு அரசு விளக்கம்..!!

    editor5By editor5July 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 31 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) பெற ஆவலுடன் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் ஆறு லட்சம் விண்ணப்பதாரர்கள், எப்போது தங்கள் புதிய அட்டை கிடைக்கும் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் 37,328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், 2 கோடியே 28 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் மூலம் விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

    இதன் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டு என்பது வெறும் பொருள் வாங்கும் ஆவணம் மட்டுமல்ல; அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், உதவிகளைப் பெறுவதற்கான முக்கிய அடையாளச் சான்றாகவும் திகழ்கிறது. எனவே புதிய கார்டு பெற மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    மார்ச் மாத இறுதி வரை இந்தத் தடை நீடித்தது. அதன் பின்னர் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், முழு வேகத்தில் நடைபெறாததால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. பலர் ரேஷன் கார்டு இல்லாததால் அரசு திட்டங்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். புள்ளிவிவரங்களின்படி, மார்ச் மாதம் வரை சுமார் 3 லட்சம் புதிய கார்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 21,000 மனுக்களைத் தவிர மற்றவை ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனையில் உள்ளன. அடுத்த மாதங்களில் மேலும் 3 லட்சம் விண்ணப்பங்கள் சேர்க்கப்பட்டதால், தற்போது மொத்தம் 6 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

    அரசு அதிகாரிகள் தரப்பில், முதல் 3 லட்சம் விண்ணப்பங்களுக்கான அட்டைகளை அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பின்னர் வந்த 3 லட்சம் விண்ணப்பங்கள் இன்னும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வரவில்லை. புதிய கார்டு வழங்க 7 முக்கிய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக, ஒரே கதவு எண்ணில் பல குடும்பங்கள் வசிப்பதாக விண்ணப்பிக்கும் சம்பவங்களில் கள ஆய்வு, விசாரணை அவசியமாகிறது. இதனால் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    மக்கள் விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உணவுத்துறை உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் வயது வரம்பை 60 ஆகக் குறைக்கும் யோசனை ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஏழை எளிய முதியவர்கள் பயனடைவர்.

    இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தத் தேவையான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை அரசு துரிதப்படுத்தினால், ஏராளமான மக்களின் நலன் உறுதி செய்யப்படும்.

    ration cards TN Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!
    Next Article ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை
    editor5

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.