Close Menu
    What's Hot

    இந்திய பங்குச் சந்தையில் அதிகரித்த அந்நிய முதலீடு… காரணம் என்ன?

    தவெக குதிரை பேரம் குறித்து மனு; ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு – ஆர்.எஸ்.பாரதி

    ஜூலை 24-ல் ஜனநாயகன் ரிலீஸ்? விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்
    Featured

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜப்பான் பிரதமர் சனயே தகாய்ச்சி சாந்தூர் இசைக்கருவியை வாசித்த சம்பவம் உலகளவில் கவனம் பெற்ற நிலையில், அதன் வரலாறு மற்றும் இந்திய கலாச்சார பாரம்பரியம் குறித்து டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் விளக்கமளித்துள்ளது.

    தூதரகம் தனது சமூக வலைதளப் பதிவில், “பிரதமர் சனயே தகாய்ச்சி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து சாந்தூர் வாசித்த காட்சி உலகம் முழுவதும் மக்களை நெகிழச் செய்தது. பல நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக சாந்தூர் இருந்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

    சாந்தூர் என்பது ஹாமர்டு டல்சிமர் (Hammered Dulcimer) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தி இசைக்கருவி. இதன் தோற்றம் பாரசீகத்தில் இருந்ததாகக் கருதப்பட்டாலும், காஷ்மீரில் தனித்துவமான வளர்ச்சியைப் பெற்ற இந்திய சாந்தூர், இந்திய இசை மரபில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

    சுமார் 100 தந்திகளைக் கொண்ட இந்த இசைக்கருவி, ‘மெஸ்ராப்’ எனப்படும் இரண்டு இலகுரக மரக் குச்சிகளால் வாசிக்கப்படுகிறது. பண்டைய சமஸ்கிருத நூல்களில் இது “நூறு தந்திகள் கொண்ட வீணை” என குறிப்பிடப்பட்டிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    20-ஆம் நூற்றாண்டில், பண்டிட் சிவ்குமார் ஷர்மா, சாந்தூரை இந்துஸ்தானி செவ்வியல் இசைக்கேற்ப மறுவடிவமைத்து, உலக அரங்கில் அறிமுகப்படுத்தினார். அவரது முயற்சியால், சாந்தூர் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற செவ்வியல் இசைக்கருவிகளில் ஒன்றாக உயர்ந்தது.

    வால்நட் மரத்தால் நுட்பமாக உருவாக்கப்படும் சாந்தூர், காஷ்மீரின் ‘சூஃபியானா மௌசிகி’ (Sufiana Mausikyi) என்ற சூஃபி இசை மரபிலும், நாட்டுப்புற மற்றும் பக்தி இசையிலும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஜூலை 2 அன்று பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய மதிய விருந்தில், பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்த ஜப்பான் பிரதமர் சனயே தகாய்ச்சியை, இசைக் கலைஞர் ஒருவர் சாந்தூரை வாசிக்க அழைத்தார்.

    அதைத் தொடர்ந்து தகாய்ச்சி சாந்தூரை வாசித்தார். இதைக் கண்ட பிரதமர் மோடி புன்னகையுடன் கைதட்டி பாராட்டியதோடு, அங்கு இருந்த அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Indian Embassy japan Japan Prime Minister Narendra Modi pm modi Santoor
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடக்கம்!
    Next Article சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    இந்திய பங்குச் சந்தையில் அதிகரித்த அந்நிய முதலீடு… காரணம் என்ன?

    July 13, 2026

    தவெக குதிரை பேரம் குறித்து மனு; ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு – ஆர்.எஸ்.பாரதி

    July 13, 2026

    ஜூலை 24-ல் ஜனநாயகன் ரிலீஸ்? விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய பங்குச் சந்தையில் அதிகரித்த அந்நிய முதலீடு… காரணம் என்ன?

    தவெக குதிரை பேரம் குறித்து மனு; ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு – ஆர்.எஸ்.பாரதி

    ஜூலை 24-ல் ஜனநாயகன் ரிலீஸ்? விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!

    திமுக 40 எம்.பி தொகுதிகளிலும் ராஜினாமா செய்யத் தயாரா? – துரை வைகோ சவால்!

    கன்னியாகுமரி : குட்கா வழக்கில் கைதான கைதி..! திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.