Close Menu
    What's Hot

    அமித்ஷா கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வியட்நாம் படகு விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை வந்தடைந்தன!
    Featured

    வியட்நாம் படகு விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை வந்தடைந்தன!

    Editor web1By Editor web1July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வியட்நாமில் நேரிட்ட படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்களின் உடல்கள் விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டன.

    வியட்நாமின் ஹோசி மின் நகரில் இருந்து வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டு, மும்பை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

    செல்போன் நிறுவனம் சார்பில் அதன் இந்திய விற்பனை முகவர்கள் மற்றும் ஊழியர்கள் என 105 பேர் கடந்த ஜூலை 8-ம் தேதி வியட்நாமுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 32 பேர் கொண்ட குழுவினர் கடலில் படகில் சென்றபோது, பெரிய அலை மோதியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர், ஆந்திரத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 17 பயணிகளும், படகு ஊழியர்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இறந்தவர்களின் உடல்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்ததையடுத்து, அவற்றை அங்கிருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களைப் பெற்று அவர்களின் சொந்த ஊர்களுக்கு விரைவாக அனுப்பி வைப்பதற்காகத் தமிழக அதிகாரிகள் குழுவினர் மும்பையிலேயே முகாமிட்டு தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    விபத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகளில் 16 பேர் தாயகம் திரும்பிவிட்டதாக ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் “குதிரை பேர” அரசியல் அதிகரிப்பு!. உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டி!. CPI வீரபாண்டியன் அறிவிப்பு!
    Next Article சிங்கக் குட்டியுடன் மாஸ் லுக்: சிவராஜ்குமாரின் ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
    Editor web1
    • Website

    Related Posts

    அமித்ஷா கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

    July 14, 2026

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    July 14, 2026

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமித்ஷா கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.