Close Menu
    What's Hot

    வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு

    சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்:  சேகர்பாபு குற்றச்சாட்டு

    கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை!. சிசிடிவி கேமிராவுக்கு கருப்பு மை அடித்து துணிகரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்தியா- பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்! எந்தெந்த துறைகளில் என்னென்ன பலன்?
    Featured

    இந்தியா- பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்! எந்தெந்த துறைகளில் என்னென்ன பலன்?

    Editor web1By Editor web1July 15, 2026Updated:July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா- பிரிட்டன் இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்’ இன்று (ஜூலை 15) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

    இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளானது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம், பிரிட்டன் தனது 98.8% இறக்குமதி வரி வரம்புகளை நீக்கியோ அல்லது குறைத்தோ உள்ளது. இதன் மூலம், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 99.5% மதிப்பிலான பொருட்களுக்கு வரியில்லா அல்லது குறைந்த வரிச் சலுகை உடனடியாகக் கிடைக்கும். இந்தியா தனது 89.5% இறக்குமதி வரம்புகளில் வரிகளைக் குறைக்கிறது. இதில் 30.3% வரிகள் உடனடியாக நீக்கப்படும், மீதமுள்ளவை படிப்படியாகக் குறைக்கப்படும்.

    எந்தெந்தத் துறைகளுக்கு லாபம்?

    வாகனத் துறை: பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள் மற்றும் லாரிகளுக்கான இறக்குமதி வரி 110%-லிருந்து படிப்படியாக 10%-ஆகக் குறைக்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார (EV) மற்றும் ஹைபிரிட் கார்களை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழ் (Quota) வரியில்லா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மதுபானங்கள்: பிரிட்டனின் புகழ்பெற்ற ஸ்காட்ச் விஸ்கி மீதான இறக்குமதி வரி 150 விழுக்காட்டிலிருந்து, தொடக்கத்திலேயே 75%-ஆகக் குறைக்கப்பட்டு, அடுத்த 10 ஆண்டுகளில் 40%-ஆகக் குறைக்கப்படும்.

    இந்திய ஏற்றுமதிப் பொருட்கள்: இந்தியாவின் ஜவுளி, ஆயத்த ஆடைகள், பாதணிகள் மற்றும் சில உணவுப் பொருட்களுக்குப் பிரிட்டன் சந்தையில் வரியில்லா நுழைவு கிடைப்பதால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது பெரும் சாதகமாக அமையும்.

    அரசு கொள்முதல்: இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, மத்திய அமைச்சகங்களின் சுமார் 40,000 உயர்மதிப்புள்ள உள்கட்டமைப்பு மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கான டெண்டர்களில் பிரிட்டன் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், நீண்ட கால நோக்கில் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் £25.5 பில்லியன் (சுமார் ₹2.7 லட்சம் கோடி) வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஐடி (IT) துறை மற்றும் திறன்மிக்க பணியாளர்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நாட்டின் பால்வளம், தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் தங்கம்-வைர நகைத் தொழில்களைப் பாதுகாக்கும் வகையில், அவற்றுக்கு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விதிவிலக்கு அளித்து இந்தியா தனது உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகக்கோப்பை கனவு!. ஸ்பெயினுடன் மோதப் போவது யார்?. 24 ஆண்டுகளுக்கு பின் ஒரு வரலாற்று சந்திப்பு!
    Next Article ஈரானுக்கு பேரதிர்ச்சி!. துறைமுகங்களை சுற்றி வளைத்த அமெரிக்கா!. மின் நிலையங்களை அழிப்பேன் என டிரம்ப் மிரட்டல்!
    Editor web1
    • Website

    Related Posts

    வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு

    July 15, 2026

    கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை!. சிசிடிவி கேமிராவுக்கு கருப்பு மை அடித்து துணிகரம்!

    July 15, 2026

    ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்; தீவிர விசாரணை

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு

    சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்:  சேகர்பாபு குற்றச்சாட்டு

    கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை!. சிசிடிவி கேமிராவுக்கு கருப்பு மை அடித்து துணிகரம்!

    ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்; தீவிர விசாரணை

    திருப்பத்தூர் : இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..! கணவர் குடும்பத்தினர் கைது..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.