Close Menu
    What's Hot

    ”மு.க. ஸ்டாலின் – இபிஎஸ் குடும்பத்தினரை மத்திய அமைச்சராக்க முயற்சி”

    குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாடு… ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம்

    ககன்யான் திட்ட விஞ்ஞானிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – பணி விலகலைக் கட்டுப்படுத்த ஐ.எஸ்.ஆர்.ஓ நடவடிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; தெஹ்ரானிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்
    Featured

    ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; தெஹ்ரானிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 ship
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஈரானின் கார்க் (Kharg) தீவை நோக்கிச் சென்ற காலி எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், அதே நேரத்தில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அமெரிக்க ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, எச்சரிக்கைகளை மீறி பயணித்த எண்ணெய் கப்பலை செயலிழக்கச் செய்வதற்காக ஹெல்ஃபயர் (Hellfire) ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இதனுடன், ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படும் ஈரானின் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்களும் குறிவைத்து தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.

    ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, தெஹ்ரான், அஹ்வாஸ், பந்தர் அப்பாஸ், சிரிக், கேஷ்ம் உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

    இதற்கு பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத் பகுதிகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    சமீபத்திய அமெரிக்க தாக்குதல்களில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 300-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா கடற்படை முற்றுகையை மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

    இதற்கு பதிலளித்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), “மத்திய கிழக்கிலிருந்து எரிசக்தி ஏற்றுமதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; இல்லையெனில் யாருக்கும் கிடைக்காது” என்று எச்சரித்துள்ளது.

    இந்த பதற்றத்தின் காரணமாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 85 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இது மோதலுக்கு முந்தைய நிலையை விட 15 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரான் விரைவில் தோற்கடிக்கப்படும். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரானின் அணு திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    இதற்கிடையில், அணு விவகாரம் தொடர்பாக அமெரிக்கா–ஈரான் இடையே முன்பு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) நிபந்தனைகள் நடைமுறையில் அமல்படுத்தப்படாவிட்டால், அதனை பின்பற்ற எந்த காரணமும் இல்லை என்று ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகம்மது பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.

    hormuz strait Iran Maritime Security Oil Tanker Strait of Hormuz. Tehran United States US Airstrike
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமறக்க முடியுமா..?? ஜூலை 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. 94 குழந்தைகளுக்கு உருக்கமான அஞ்சலி!
    Next Article உயிருக்கு போராடும் வாங்சுக்..!! காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? டெல்லி ஐகோர்ட் கேள்வி..!!
    Editor TN Talks

    Related Posts

    ”மு.க. ஸ்டாலின் – இபிஎஸ் குடும்பத்தினரை மத்திய அமைச்சராக்க முயற்சி”

    July 16, 2026

    குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாடு… ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம்

    July 16, 2026

    ககன்யான் திட்ட விஞ்ஞானிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – பணி விலகலைக் கட்டுப்படுத்த ஐ.எஸ்.ஆர்.ஓ நடவடிக்கை

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”மு.க. ஸ்டாலின் – இபிஎஸ் குடும்பத்தினரை மத்திய அமைச்சராக்க முயற்சி”

    குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாடு… ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம்

    ககன்யான் திட்ட விஞ்ஞானிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – பணி விலகலைக் கட்டுப்படுத்த ஐ.எஸ்.ஆர்.ஓ நடவடிக்கை

    விழுந்தா வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு – ரூ.30 கோடி கேரள ஓணம்  பம்பர் லாட்டரி வெளியீடு

    ஹார்முஸ் பகுதிக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம்!. மத்திய அரசு அதிரடி உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.