Close Menu
    What's Hot

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    உடுமலை அருகே நள்ளிரவில் துணிகரம்: விவசாயி வீட்டில் கத்தி முனையில் ரூ.45 ஆயிரம் கொள்ளை!

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள்!. பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சிறை மரண விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை: தென்தாமரைக்குளம் SI ஆயுதப்படைக்கு மாற்றம்..!!
    Featured

    சிறை மரண விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை: தென்தாமரைக்குளம் SI ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

    editor5By editor5July 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 23 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் (33) சிறையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்டிக்கடை நடத்தி வந்த அவர், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததாகக் கூறி தென் தாமரைகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    கடந்த 9-ம் தேதி அவரது கடையில் நடத்திய சோதனையில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது அவருக்கு மூன்றாவது முறை என்பதால் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைதுக்குப் பிறகு 13-ம் தேதி காலை சபரிவர்மன் சிறையில் உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

    உடலைப் பார்வையிட்ட மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்கள், சபரிவர்மனை போலீசார் மற்றும் சிறை அதிகாரிகள் அடித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டினர். “நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்” எனக் கூறி ஆஸ்பத்திரி வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் உறவினர்களுக்கு ஆதரவாகத் திரண்டனர். நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். சிறைக்குச் சென்று வார்டர்கள் மற்றும் கைதிகளிடம் விசாரித்தார்.

    குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் சிறைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பிரேதப் பரிசோதனையில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது கொலை என்பதை உறுதிப்படுத்தியது. விசாரணையில், 12-ம் தேதி இரவு சபரிவர்மனுக்கும் சக கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதில் அவரை கை கால்களைக் கட்டி வைத்து வார்டர்கள் மற்றும் கைதிகள் சேர்ந்து தாக்கியதாகவும் தெரியவந்தது. தாக்குதலில் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து நாகர்கோவில் சிறையின் முதன்மை வார்டர் திருமலை நம்பி, வார்டர்கள் ஜெகன், சிவகுமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சபரிவர்மனைத் தாக்கியதாகக் கூறப்படும் விஷ்ணு (21, மார்த்தாண்டம்), சாரதி (19), ஜெகன் (40, குலசேகரம்), சரத், பெருமாள் (நெல்லை), சேதுராம் (30), அரவிந்த் (27), அஜித் (29, கொட்டாரம்) உள்ளிட்ட எட்டு கைதிகளும் கைது செய்யப்பட்டனர்.

    சபரிவர்மனின் குடும்பம் அவரது மரணத்துக்கு நீதி கோரியதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தென் தாமரைகுளம் காவல் நிலைய எஸ்.ஐ.யை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சிறை நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Custodial death nagerkovil
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராமர் கோயில் நன்கொடை முறைகேடு முதல்… நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எழுப்பவுள்ள 4 முக்கிய கேள்விகள்!
    Next Article பேருந்து கட்டண உயர்வா..?? கூடவே கூடாது..!! அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் கறார் உத்தரவு..!!
    editor5

    Related Posts

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    July 16, 2026

    உடுமலை அருகே நள்ளிரவில் துணிகரம்: விவசாயி வீட்டில் கத்தி முனையில் ரூ.45 ஆயிரம் கொள்ளை!

    July 16, 2026

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள்!. பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    உடுமலை அருகே நள்ளிரவில் துணிகரம்: விவசாயி வீட்டில் கத்தி முனையில் ரூ.45 ஆயிரம் கொள்ளை!

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள்!. பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

    அமெரிக்க அரசியலில் புதிய பரபரப்பு… ஜே.டி. வான்ஸுக்கு ஈரானின் ரகசிய அறிக்கை..!!

    மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டில் நாளை முதல் ஆன்லைன் ‘சுய கணக்கெடுப்பு’ தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.