Close Menu
    What's Hot

    யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!

    3வது நாடக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!

    வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்.. இந்தியாவில் வருகிறதா பிளாஸ்டிக் கரன்சி? டெண்டர் கோரிய RBI..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?
    Featured

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    Editor web1By Editor web1July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 07 18 at 11.24.08 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெரம்பலூர் மாவட்டத்தில் 125 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களிடம், நாளொன்றுக்கு ரூ.50 வீதம் ‘கட்சி நிதி’ வசூலிப்பதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (முன்பு 100 நாள் வேலைத்திட்டம்), தற்போது 125 நாட்களாக நீட்டிக்கப்பட்டு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு தொழிலாளிக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.450 வரை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.56,250 வரை வருமானம் ஈட்டக்கூடிய வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில், இத்திட்டம் நிகழ்ந்த மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தின் வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பணித்தளத்திற்கு வரும் குறிப்பிட்ட சில நபர்கள், தொழிலாளர்களிடம் தினமும் தலா ரூ.50-ஐ ‘கட்சி நிதி’ என்ற பெயரில் கட்டாயமாக வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக வேலை செய்யும் இடத்தில் ஒருவரிடம் பணியாளர்கள் 2 பேர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு வழங்கும் ஊதியத்தில் கை வைக்கும் இந்தச் செயலுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபழனி கோவில் நில சர்ச்சை: சேதுபதி வீட்டில் இறங்கிய சிபிசிஐடி.. தலைமறைவானவருக்கு வலை..!!
    Next Article சிதம்பரம்: மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடக்கம்!
    Editor web1
    • Website

    Related Posts

    யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!

    July 18, 2026

    3வது நாடக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!

    July 18, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்.. இந்தியாவில் வருகிறதா பிளாஸ்டிக் கரன்சி? டெண்டர் கோரிய RBI..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!

    3வது நாடக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!

    வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்.. இந்தியாவில் வருகிறதா பிளாஸ்டிக் கரன்சி? டெண்டர் கோரிய RBI..!!

    மீண்டும் திறக்கப்படும் அம்மா மினி கிளினிக்குகள்..!! அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட் நியூஸ்..!!

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.