Close Menu
    What's Hot

    யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!

    3வது நாடக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!

    வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்.. இந்தியாவில் வருகிறதா பிளாஸ்டிக் கரன்சி? டெண்டர் கோரிய RBI..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!
    தமிழ்நாடு

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    Editor web1By Editor web1July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 18 12h00m08s500
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, 15,000 பயன் தரும் நாட்டு மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மாநில தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று தொடங்கி வைத்தார்.

    புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து, மாநகரப் பகுதியில் உள்ள நீர்நிலைகள், பூங்காக்கள், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

    vlcsnap 2026 07 18 12h00m25s850

    புதுக்கோட்டை மாநகராட்சி போஸ் நகர் ராஜா குளத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டு முதல் மரக்கன்றை நட்டு, திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக வேம்பு, புங்கை, நாவல், நீர்மருது போன்ற நிழல் தரும் மற்றும் பயன் தரும் நாட்டு மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. மொத்தமாக 15,000 மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் கட்டமாக 600 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    மாவட்ட ஆட்சியர் அருளரசு முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ், நகர அலுவலர் காயத்ரி, வனச்சரக அலுவலர் ராஜேந்திரன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் காந்திமதி, மாநகர சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!
    Next Article இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1..!!
    Editor web1
    • Website

    Related Posts

    யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!

    July 18, 2026

    மீண்டும் திறக்கப்படும் அம்மா மினி கிளினிக்குகள்..!! அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட் நியூஸ்..!!

    July 18, 2026

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!

    3வது நாடக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!

    வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்.. இந்தியாவில் வருகிறதா பிளாஸ்டிக் கரன்சி? டெண்டர் கோரிய RBI..!!

    மீண்டும் திறக்கப்படும் அம்மா மினி கிளினிக்குகள்..!! அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட் நியூஸ்..!!

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.