Close Menu
    What's Hot

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    நீதி மன்றங்களில் வேலை; 800 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி –  கில்லாடியை தேடி வரும் காவல்துறை!

    மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»குஜராத்: அரசுப்பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி.. 147 மாணவிகள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு..??
    Featured

    குஜராத்: அரசுப்பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி.. 147 மாணவிகள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு..??

    editor5By editor5July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 27 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இயங்கும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா அரசு உறைவிடப் பள்ளியில் இரவு உணவு உண்ட மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக தீவிர உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளி விடுதியில் 215 மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர்.

    நேற்றிரவு சப்ஜி, கோதுமை ரொட்டி, கிச்சடி மற்றும் கீர் ஆகிய உணவுகள் வழங்கப்பட்டன. இந்த உணவை உண்ட பிறகு இன்று காலை பல மாணவிகளுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றின. இதனால் 147 மாணவிகள் உடனடியாக சூடா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 45 பேரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சுரேந்திரநகர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் பி.ஜி. கோஹில் இது குறித்து கூறுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் தற்போது நிலையான உடல்நிலையில் உள்ளனர். எந்தவித உயிராபத்தும் இல்லை. உணவு மாதிரிகள் உடனடியாக சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்” என்றார். இச்சம்பவம் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு பெற்றோர் கூறுகையில், “எனது இரண்டு மகள்களும் இப்பள்ளியில் படிக்கின்றனர். ஒரு மகளுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். ஆனால் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று குற்றம்சாட்டினார். பல பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் தங்களுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்காததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    உணவுப் பாதுகாப்பு மற்றும் விடுதி மாணவிகளின் நலன் குறித்து அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாணவிகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அரசு உறைவிடப் பள்ளிகளில் உணவு தரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

    Gujarat hostel food Students
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article6 மாதம்தான் தவெக ஆட்சி… திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் – அனிதா ராதாகிருஷ்ணன் கணிப்பு
    Next Article இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு நடவடிக்கை – அமைச்சர் வன்னியரசு தகவல்
    editor5

    Related Posts

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    July 18, 2026

    நீதி மன்றங்களில் வேலை; 800 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி –  கில்லாடியை தேடி வரும் காவல்துறை!

    July 18, 2026

    மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    நீதி மன்றங்களில் வேலை; 800 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி –  கில்லாடியை தேடி வரும் காவல்துறை!

    மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்!

    72-வது தேசிய திரைப்பட விருதுகள் – இன்று மாலை அறிவிப்பு

    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரம்.. சிக்கிய 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.