Close Menu
    What's Hot

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
    Featured

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    022 cricket
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது.

    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

    தொடக்க வீரர்களான பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தெல் இந்திய பந்துவீச்சை ஆதிக்கம் செலுத்தி முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தனர். டக்கெட் அதிரடியாக விளையாடி 141 ரன்கள் விளாசினார். அவருக்கு துணையாக பெத்தெல் 91 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் களமிறங்கிய ஜோ ரூட், வெறும் 48 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அணியின் ரன் வேகத்தை மேலும் உயர்த்தினார். இறுதிக்கட்டத்தில் ஜோஸ் பட்லர், 13 பந்துகளில் 41 ரன்கள் விளாசி இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து 82 ரன்கள் சேர்த்தது.

    இந்தியாவின் அனைத்து பந்துவீச்சுகளையும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தவிடுபொடியாக்கினர். ஒவ்வொரு பந்து வீச்சாளரும் ஓவருக்கு 6 ரன்களுக்கு குறைவாக வழங்கவில்லை. பிரசித் கிருஷ்ணா – 2 விக்கெட்டுகளும், பிரின்ஸ் யாதவ் – 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இளம் வேகப்பந்துவீச்சாளர் குர்னூர் பிரார், தனது 10 ஓவர்களில் 97 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற விரும்பத்தகாத சாதனையைப் பதிவு செய்தார். இதற்கு முன்பு 1975-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கர்சன் கவ்ரி 11 ஓவர்களில் 81 ரன்கள் வழங்கியதே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

    முன்னதாக, இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்தப் போட்டியில் விளையாடவில்லை.

    388 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை இந்தியா துரத்த வேண்டியுள்ள நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ள வரலாறு இந்திய அணிக்கு கூடுதல் சவாலாக உள்ளது.

    3rd odi England 388 Runs England vs. India IND vs ENG India vs England
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா
    Next Article அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    July 20, 2026

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    July 20, 2026

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    திருவிழா பேனரில் திரிஷாவுடன் சிஎம் விஜய் படம்.. அகற்றிய போலீஸ்; பாய்ந்தது வழக்கு..!!

    வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்..!! வாயைக் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.