Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..!! காலியான விழுப்புரம் கூடாரம்..!! 1000 பேர் கூண்டோடு ராஜினாமா..!!
    Featured

    அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..!! காலியான விழுப்புரம் கூடாரம்..!! 1000 பேர் கூண்டோடு ராஜினாமா..!!

    editor5By editor5July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 25 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல்கள் இன்னும் அடங்காமல் உள்ளன. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் திரண்ட எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் பின்னர் மனம் மாறினாலும், கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மட்டத்தில் பதற்றம் தொடர்கிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 16-ம் தேதி சி.வி.சண்முகத்தின் 11 முக்கிய ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிலையிலான நிர்வாகிகள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திரண்ட இந்தப் பிரதிநிதிகள், ஐந்து வேன்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கார்களில் சென்னை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் முதலில் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ. ஜெயலலிதா சமாதிகளுக்கு நேரில் சென்று தங்கள் முறையீட்டைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளனர். பின்னர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று தங்கள் ராஜினாமா கடிதங்களை ஒப்படைக்க உள்ளனர்.

    இந்தப் பயணம் அதிமுகவில் மீண்டும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் ஒற்றுமைக்கு இது பெரும் சவாலாக அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சி.வி.சண்முகம் தரப்பினரின் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, எடப்பாடி தலைமையை மீண்டும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

    AIADMK cv shanmugam Villupuram
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக கொடி நிறத்தில் அரசுப் பேருந்துகள்? இணையத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை..!!
    Next Article பாலக்கோடு: ’நண்பன் இறந்ததால் வாழ விரும்பவில்லை’ – கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்த +2 மாணவி
    editor5

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.