Close Menu
    What's Hot

    ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

    “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல்”: மாணவர்கள் போராட்டத்துக்கு மாரி செல்வராஜ் ஆதரவு

    தாய்லாந்தில் பயங்கரவாதத் தாக்குதல்..!! துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் பரிதாப பலி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆந்திராவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!
    Featured

    ஆந்திராவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    editor5By editor5July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 16 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்திரப் பிரதேசத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடப்பா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

    அந்த ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமிக்ரான் ஆர்.எப்.5 (Omicron RF.5) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கென தனி வார்டுகளை தயார் செய்யவும், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சோகமான செய்தியும் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், விசாகப்பட்டினம் மற்றும் ராஜமுந்திரி பகுதிகளில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. மக்கள் அதிக கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    முதியோர், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.ஆந்திர அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரிசோதனைகளை அதிகரித்தல், தொடர்பு தடமறிதல் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அச்சப்படாமல், அரசின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றினால் தொற்றை விரைவில் கட்டுப்படுத்த முடியும்.

    Andhra Pradesh corona
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சி;  மூதாட்டி விரலை கடித்துக் குதறிய எலி… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
    Next Article நாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!
    editor5

    Related Posts

    ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

    July 23, 2026

    “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல்”: மாணவர்கள் போராட்டத்துக்கு மாரி செல்வராஜ் ஆதரவு

    July 23, 2026

    தாய்லாந்தில் பயங்கரவாதத் தாக்குதல்..!! துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் பரிதாப பலி..!!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

    “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல்”: மாணவர்கள் போராட்டத்துக்கு மாரி செல்வராஜ் ஆதரவு

    தாய்லாந்தில் பயங்கரவாதத் தாக்குதல்..!! துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் பரிதாப பலி..!!

    மக்கள் திண்டாட்டம் … செல்ஃபி எடுத்து அமைச்சர் கொண்டாட்டம் –  புதிய Nero அரசுக்கு எடப்பாடி கண்டனம்!  

    எழும்பூரில் இன்று மாலை நீட் எதிர்ப்பு போராட்டம்..!! மாணவர்களுடன் கைகோர்க்கும் திரை பிரபலங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.