Close Menu
    What's Hot

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும்..! அரசை விமர்சிப்பது குற்றமாகாது என நீதிமன்றம் கருத்து..!
    Featured

    ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும்..! அரசை விமர்சிப்பது குற்றமாகாது என நீதிமன்றம் கருத்து..!

    Editor web4By Editor web4July 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 25
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழநி முருகன் கோயில் நில விவகாரத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் கீழ், வினோத் சூர்யகுமார் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் போலியான மற்றும் அவதூறான தகவல்களைப் பரப்பியதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியைக் குலைப்பது, கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு வினோத் சூர்யகுமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்றும், பேச்சுரிமை கருத்தரிமை சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜராகி,
    மனுதாரர் பிரபல ஊடகவியலாளர் என்றும், கோவில் நில நிர்வாக முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் பொது நலனுக்குப் பயன்படும் என்ற உண்மையான நம்பிக்கையின் பேரிலும், தகவல்களின் அடிப்படையிலும் அந்தப் பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும், தெரிவைத்தார்.

    மேலும், அமைச்சர் மீது தனிப்பட்ட விரோதமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ மனுதாரருக்கு இல்லை எனவும் அவர் வாதிட்டார். காவல்துறை தரப்பில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதால் மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிபதி, ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும், அரசையோ அதன் அமைச்சர்களையோ வெறுமனே விமர்சிப்பது, அரசுக்கோ அல்லது பொது அமைதிக்கோ எதிரான குற்றமாகாது என்றும், கோயிலுக்குச் சொந்தமான சொத்து சொற்ப விலைக்கு விற்கப்பட்டது என்பதோ அல்லது அமைச்சரின் உறவினருக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவத்தோ மதம், இனம், வசிப்பிடம், மொழி, சாதி அல்லது சமூகம் அல்லது சமூகங்களுக்கு இடையே பகை, வெறுப்பை உருவாக்க வாய்ப்புள்ளதாகவோ அல்லது ஊக்குவிப்பதாகவோ கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

    அவதூறான , தரக்குறைவான கருத்துக்களைக் கூறுவது அல்லது தவறான தகவல்களை வெளியிடுவது, அதிகபட்சமாக பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 356-இன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தை மட்டுமே தவிர அது ஒரு புலன் விசாரணைக்குரிய குற்றம் அல்ல என குறிப்பிட்ட நீதிபதி மனுதாரரரை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

    மனுதாரர் தினந்தோறும் காலை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரோடு : ரசிகர்களோடு ரசிகராய் படம் பார்த்து ரசித்த அமைச்சர் செங்கோட்டையன்..! இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!
    Next Article செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு..!! காரணம் என்ன?
    Editor web4

    Related Posts

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    July 23, 2026

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    July 23, 2026

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    வெளியான ஜனநாயகன்….. காலியான தலைமைச் செயலகம்!

    ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.