Close Menu
    What's Hot

    ஜப்பானில் 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை; மக்கள் பீதி!

    ’காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும்’

    போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்கள்..!! கையசைத்து நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நெல்லை மனோன்மணியம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலில் ஒலித்த ’வந்தே மாதரம்’..! ’தமிழ்த்தாய் வாழ்த்து’ கடைசியாக இசைக்கப்பட்டதால் சலசலப்பு..!
    Featured

    நெல்லை மனோன்மணியம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலில் ஒலித்த ’வந்தே மாதரம்’..! ’தமிழ்த்தாய் வாழ்த்து’ கடைசியாக இசைக்கப்பட்டதால் சலசலப்பு..!

    Editor web4By Editor web4July 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 31
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகவும், நிகழ்ச்சி முடிவின் போது தேசிய கீதமான ஜன கன மனவும் இசைக்கப்படும். இதுவே மரபாக இருந்து வந்தது. ஆனால் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றப் போது முதலாவதாக தேசிய பாடலான வந்தே மாதரம் முதலாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    மத்திய அரசின் அறிவுறுத்தல் படியே இவ்வாறு வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டதாக, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் முதல் பலரது எதிர்ப்பும் கிளம்பியதால், மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார். பட்டமளிப்பு விழாவில் 871 பேருக்கு நேரடியாகப் பட்டங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தங்கம் பதக்கம் பெறும் 113 பேருக்கு மட்டுமே கவர்னர் நேரடியாகப் பட்டங்கள் வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் கவர்னரிடம் நேரடியாகப் பட்டங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் வந்த மாணவ, மாணவிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.

    இதனால் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த மாணவிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்கலை., நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, கவர்னரே அனைவருக்கும் பட்டம் வழங்குவார் என்றும் கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவான் அறிவித்தார். இதனால் பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சுமார் 45 நிமிடம் தாமதமாக பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்ற நிலையில், விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார்.

    இதைபோல தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக நெல்லை தவெக எம்எல்ஏ முருகன், கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் அறிவித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
    Next Article டிரம்ப் மனைவியை கொல்வது எப்படி..?? ஈரான் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!! உச்சகட்ட பதற்றம்..!!
    Editor web4

    Related Posts

    ஜப்பானில் 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை; மக்கள் பீதி!

    July 28, 2026

    ’காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும்’

    July 28, 2026

    போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்கள்..!! கையசைத்து நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜப்பானில் 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை; மக்கள் பீதி!

    ’காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும்’

    போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்கள்..!! கையசைத்து நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

    ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

    20 நிமிடத்தில்.. சீனாவை அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.