Close Menu
    What's Hot

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    “தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“எனக்கு 15 வயதுதான்… என்னை மன்னித்து விடுங்கள்” – பிரதமரை அவதூறாகப் பேசிய சிறுமியின் மன்னிப்பு
    Featured

    “எனக்கு 15 வயதுதான்… என்னை மன்னித்து விடுங்கள்” – பிரதமரை அவதூறாகப் பேசிய சிறுமியின் மன்னிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026Updated:August 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 sirumi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட சிறுமி, தற்போது கைகூப்பி மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், “போராட்டத்தில் சிலரின் தூண்டுதலால் பிரதமர் குறித்து மிகவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தினேன். எனக்கு இப்போது அதற்காக மிகுந்த வருத்தமாக உள்ளது” எனக் கூறும் சிறுமி,

    “எனக்கு வெறும் 15 வயதுதான். நான் செய்தது மன்னிக்க முடியாத தவறு. இது என்னுடைய முதல் மற்றும் கடைசி தவறு. நாடு முழுவதுமுள்ள மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். எனது செயலுக்காக மிகவும் வெட்கப்படுகிறேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) வயது 25 என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மன்னிப்பு வீடியோவில் தனக்கு 15 வயது மட்டுமே என சிறுமி கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

    கடந்த புதன்கிழமை, மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக நொய்டா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நொய்டா போலீசார் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, பின்னர் அந்த வழக்கை டெல்லி பாராளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

    புகாரில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததுடன், சமூகத்தில் அமைதிக்கேடு மற்றும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அந்த பேச்சு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த மன்னிப்பு வீடியோ வெளியாகும் சில மணி நேரங்களுக்கு முன்பே, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் தன்னை நோக்கியும், தனது மறைந்த தாயை நோக்கியும் முன்வைக்கப்பட்ட அவதூறு முழக்கங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    அந்த வீடியோவில், “அவதூறு வார்த்தைகளால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடையாது. தவறான பாதைக்கு சென்ற இளைஞர்களை தண்டிப்பதை விட, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட குழந்தைகள். அவர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்வதும், தொந்தரவு செய்வதும் தீர்வல்ல. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன்; சமூகமும் அவர்களை மன்னித்து நல்ல பாதைக்கு வழிநடத்த வேண்டும். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவுக்காக உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

    Apology India News prime minister social media Viral Video
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’பொதுவெளியில் பட்ஜெட் ஆவணம்… ரகசிய காப்பு பிரமாணம் மீறலாகாதா?’- அதிமுக கேள்வி
    Next Article டிரம்ப்புக்கு பதிலடி… அமெரிக்காவின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைப்போம்… ஈரான் எச்சரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    August 1, 2026

    “தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு

    August 1, 2026

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    “தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 விருதுகள்… தமிழக வீரர்கள் தட்டித் தூக்கினர்!

    “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.