Close Menu
    What's Hot

    காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!

    போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு

    நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெங்களூரு விசிட் விவகாரம்.. உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில் என்ன?
    Featured

    பெங்களூரு விசிட் விவகாரம்.. உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில் என்ன?

    editor5By editor5August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 3 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மேகதாது அணை திட்டம் மற்றும் காவிரி நீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானங்களை தாக்கல் செய்தனர். சபாநாயகர் பிரபாகர் அவற்றை ஏற்றுக்கொண்டார்.

    தீர்மானத்தின் மீது பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரி நதிநீர் பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏன் நடத்தப்படவில்லை என்றும், முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுவது உண்மையா என்றும் கேள்வி எழுப்பினார். மேகதாது திட்டம் குறித்தும் தமிழ்நாட்டின் நலன் பாதிக்கப்படாதவாறு உறுதியான நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பியதாகவும், நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் முழுமையான விவரங்களை வெளியிடாததால் அடுத்த நாளே அனுமதி வழங்கக் கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார்.

    காவிரி பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியாக கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நினைத்ததாகக் கூறிய அவர், “பெங்களூரு செல்ல விரும்பியது நான்தான். அண்டை நாடுகளுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்கும்போது, அண்டை மாநிலங்களுடன் பேசிப் பார்ப்பதில் தவறில்லை. அவமானம் நேர்ந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக அதைத் தாங்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

    மேலும், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என உறுதியளித்த முதல்வர், இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் விரிவான விளக்கம் அளிப்பார் என்றும், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை முழுமையாகப் பின்பற்றினால் உண்மை தெரியும் என்றும் குறிப்பிட்டார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி தமிழ்நாட்டின் நீர் உரிமை பாதுகாக்கப்படும் என்பதும் அரசின் நிலைப்பாடாக உள்ளது.

    cm vijay tn assembly
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபீகார் : உடைந்த காலுடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்..! அட்டைப் பெட்டியால் கட்டுப்போட்ட மருத்துவர்..!
    Next Article ‘நீங்கள் என்ன பண்ணீங்க?’ – மேகதாது விவகாரத்தில் ஆதவ் கேள்விக்கு கே.என். நேருவின் பதில்!
    editor5

    Related Posts

    காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!

    August 7, 2026

    போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு

    August 7, 2026

    நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!

    போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு

    நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!

    தமிழகத்திற்கு நியாயமான நிதிப் பகிர்வு வேண்டும்!. பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்! திமுக, அதிமுக ஆதரவு!

    டூத் பேஸ்டுக்கு ரசீது… டாஸ்மாக் மதுவுக்கு இல்லையா?…  உயர்நீதிமன்றம் கேள்வி… கடைகளில் கூடுதல் வசூல் குறித்தும் அதிரடி உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.