Close Menu
    What's Hot

    சிலிண்டருக்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு!. அதிர வைக்கப் போகும் புதிய மின்சாரத் திட்டம்!

    Gen Z தலைமுறையினருக்காகவே பதவியை விட்டேன்!. தர்மேந்திர பிரதான் உருக்கமான பேச்சு!

    பயணி லேட்டா வந்தா விமானம் நிக்குமா?. இண்டிகோ விமானத்தில் நடந்த ரகளை!. பைலட் செயலால் டென்ஷனான பயணிகள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்மூஸ் திறக்கப்படாது!. புதிய நிபந்தனை விதித்த ஈரான்!
    உலகம்

    அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்மூஸ் திறக்கப்படாது!. புதிய நிபந்தனை விதித்த ஈரான்!

    Editor web3By Editor web3August 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Strait of Hormuz
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்மூஸ் நீரிணையைத் திறக்க வேண்டுமானால், அமெரிக்கா தனது “நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த நீரிணை மற்றும் அதன் போக்குவரத்து நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் தலைகீழாக மாற்றக்கூடிய புதிய நிபந்தனைகளையும் ஈரான் விதித்துள்ளது.

    ஈரானின் மிக உயர்மட்ட அமைப்பான ‘உயர்ந்த தேசிய பாதுகாப்புப் பேரவை’ (வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக் கூடாது. ஈரானுக்கும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளுக்கும் எதிரான போரை அமெரிக்கா நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

    ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும் மற்றும் இப்பகுதியிலிருந்து தனது ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். போர் சேதங்களுக்கான இழப்பீட்டை முழுமையாக வழங்க வேண்டும், பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை “நிபந்தனையற்ற முறையில்” விடுவிக்க வேண்டும்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், இறுதி ஒப்பந்தத்தை எட்ட நிர்ணயிக்கப்பட்ட 60 நாள் காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஹார்மூஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாக ஓமன் நாட்டுடன் ஒரு தனி ஒப்பந்தத்தை எட்டும் முயற்சியில் தாங்கள் நெருங்கிவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய ஈரானிய வெளியுறவை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வழிசெலுத்துதல் குறித்தும், குறிப்பாக ஒரு போக்குவரத்து வழித்தடத்தை நிர்ணயிப்பது குறித்தும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், நீரிணை திறக்கப்படுவது மேற்கண்ட பிற நிபந்தனைகளைப் பொறுத்தே அமையும் என்றார்.

    மறுபுறம், பேச்சுவார்த்தைகள் “நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான சூழலில்” நடைபெற்று வருவதாக ஓமன் நாடு தெரிவித்துள்ளதுடன், நீரிணையில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் கண்டித்துள்ளது.

    இதற்கிடையில், அபுதாபியைச் சேர்ந்த அரசுக்குச் சொந்தமான ADNOC எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஹோர்மூஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரான்தான் இந்தக் கப்பல் மீதான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அமீரக வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

    பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியதிலிருந்து, நீரிணையைக் கடக்கும்போது ADNOC நிறுவனத்தின் டஜன் கணக்கான கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு பணியாளர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், ஓமனின் காசாப் நகருக்குக் கிழக்கே சென்று கொண்டிருந்த மற்றொரு கப்பல் மீதும் அடையாளம் தெரியாத ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் இங்கிலாந்து கடல்சார் வர்த்தகப் போக்குவரத்து மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

    Iran says Strait of Hormuz. US corrects behaviour won't open
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!. 42 ராணுவ வீரர்கள் பலி!. நைஜர் நாட்டில் சோகம்!
    Next Article பயணி லேட்டா வந்தா விமானம் நிக்குமா?. இண்டிகோ விமானத்தில் நடந்த ரகளை!. பைலட் செயலால் டென்ஷனான பயணிகள்!
    Editor web3
    • Website

    Related Posts

    சிலிண்டருக்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு!. அதிர வைக்கப் போகும் புதிய மின்சாரத் திட்டம்!

    August 9, 2026

    Gen Z தலைமுறையினருக்காகவே பதவியை விட்டேன்!. தர்மேந்திர பிரதான் உருக்கமான பேச்சு!

    August 9, 2026

    பயணி லேட்டா வந்தா விமானம் நிக்குமா?. இண்டிகோ விமானத்தில் நடந்த ரகளை!. பைலட் செயலால் டென்ஷனான பயணிகள்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிலிண்டருக்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு!. அதிர வைக்கப் போகும் புதிய மின்சாரத் திட்டம்!

    Gen Z தலைமுறையினருக்காகவே பதவியை விட்டேன்!. தர்மேந்திர பிரதான் உருக்கமான பேச்சு!

    பயணி லேட்டா வந்தா விமானம் நிக்குமா?. இண்டிகோ விமானத்தில் நடந்த ரகளை!. பைலட் செயலால் டென்ஷனான பயணிகள்!

    அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்மூஸ் திறக்கப்படாது!. புதிய நிபந்தனை விதித்த ஈரான்!

    2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!. 42 ராணுவ வீரர்கள் பலி!. நைஜர் நாட்டில் சோகம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.