Close Menu
    What's Hot

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»நாம் இணைந்து தீர்வு காண இது ஒரு வாய்ப்பு.. மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்!
    இந்தியா

    நாம் இணைந்து தீர்வு காண இது ஒரு வாய்ப்பு.. மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. பின்னர், இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகள் மேற்கொண்டது. அவற்றை தடுத்து நிறுத்தி, இந்திய படைகள் தாக்கி அழித்தன. இதன் பின்னர், அமெரிக்கா தலையீடு செய்ததால் சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதனை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன.

    இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: ராகுல் அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒருமனதாக வேண்டுகோள் விடுக்கின்றன.

    ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பால் முதலில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் குறித்து மக்களுக்காக எம்.பி.க்கள் விவாதிக்க வேண்டியது முக்கியம். நாம் எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு, நாம் இணைந்து தீர்வு காண இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த கோரிக்கையை நீங்கள் உடனடியாக பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

    இதையும் படிக்க: எல்லையில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை அதிகாரி.. 7 வீரர்கள் காயம்!

    மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில், “தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சூழலில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்கா முதலில் அறிவித்த போர் நிறுத்தம் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அதே வேண்டுகோளுக்காக நானும் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

    congress Operation Sindoor rahul gandhi ஆபரேஷன் சிந்தூர் காங். தலைவர் சிறப்பு கூட்டம் நாடாளுமன்றம் ராகுல்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயார் ட்ரோல் மெட்டீரியல்?.. நீயா நானா?…
    Next Article ஒரே நாளில் 2 முறை சரிவு… சவரன் ரூ.2,360 குறைந்தது…
    Editor TN Talks

    Related Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    April 12, 2026

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    திமுகவின் மோசமான நிர்வாகம் அம்பலமாகி வருகிறது!. பிரதமர் மோடி அட்டாக்!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    Trending Posts

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    April 12, 2026

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    April 12, 2026

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    April 12, 2026

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.