Close Menu
    What's Hot

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதி நியமனம்… யார் இந்த பி.ஆர் கவாய்?
    இந்தியா

    உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதி நியமனம்… யார் இந்த பி.ஆர் கவாய்?

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Justice BR Gavai1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்று (மே13) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார்.

    குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பி.ஆர். கவாய்க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மத்திய அமைச்சர் ஜெ.பி.நாட்டா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் பிறந்த பி.ஆர் கவாய், கேரளா மற்றும் பிகார் மாநில ஆளுநராக இருந்த ஆர்.எஸ் கவாயின் மகன் ஆவார். இவரது முழுபெயர் பூஷன் ராமகிருஷ்ண கவாய் ஆகும். இவர் அட்டவணை இனத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி ஆவார். வழக்கறிஞராக பணியாற்றிய பி.ஆர் கவாய், நாக்பூர் மற்றும் அமராவதி நகராட்சிகளுக்கும், அமராவதி பல்கலைக்கழகத்திற்கும் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் 2003-ம் ஆண்டு நாக்பூர் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் பம்பாய் உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 14 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியாற்றியபோது பல முக்கிய வழக்குகளில் பி.ஆர் கவாய் வழங்கியுள்ள தீர்ப்புகள் குறிப்பிடத்தக்கவை.

    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்த வழக்கு, ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளர் உட்பட 6 பேரை விடுவித்த வழக்கு, தேர்தல் பத்திரத் திட்டம், அட்டவணைப் பிரிவினருக்கான உள்ஒதுக்கீடு விதி அறிமுகம் உள்ளிட்ட வழக்குகளின் அமர்வில் பி.ஆர் கவாய் இடம்பெற்றவர் ஆவார். உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது என்று கருத்து தெரிவித்து கடுமையாக எதிர்த்தவர் பி. ஆர் கவாய்.

    தற்போது பதவியேற்றுள்ள பி.ஆர் கவாய், 65 வயதில் ஓய்வு பெற உள்ளதால் 6 மாத காலம் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    52-வது தலைமை நீதிபதி இந்தியா உச்ச நீதிமன்றம் சட்ட வரலாறு பி.ஆர். கவாய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு… சபரி மலையில் நாளை முதல் தரிசனம்!
    Next Article காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றுப் படம்… இயக்குநர் கௌதமன் பதிலளிக்க நோட்டீஸ்…
    Editor TN Talks

    Related Posts

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    July 15, 2026

    கருப்பை வாய் கேன்சருக்கு கிடைக்கப்போகும் தீர்வு..!! கர்நாடக அரசு அதிரடி ஆக்ஷன்..!!

    July 15, 2026

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.