Close Menu
    What's Hot

    ‘ஜனநாயகன்’ 5 நாளில் வசூல் இவ்வளவா?

    ‘ஈரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயார்’!.அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    பட்ஜெட் தொடர்: உதயநிதி தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: காணொலி வாயிலாக ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»70வயதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி… சிதம்பரத்தை சேர்ந்த முதியவர் அசத்தல்…
    தமிழ்நாடு

    70வயதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி… சிதம்பரத்தை சேர்ந்த முதியவர் அசத்தல்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kothandaraman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15-ம் தேதி வரை தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதியிருந்தனர்.

    இந்த தேர்வு முடிவுகளை இன்று (16.05.2025) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதன்படி இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 பேர். இது கிட்டத்தட்ட 93.80சதவீதம் ஆகும். தனித்தேர்வர்களில் சிதம்பரம் அருகே 70 வயது முதியவர் ஒருவரும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

    சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான கோதண்டராமன். இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 1965-ம் ஆண்டு 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பின் சிதம்பரத்தில் உள்ள ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்ந்த போது, அவரது தந்தை மற்றும் தாய் இறந்துவிட படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளார்.

    பெற்றோர் மறைந்த பிறகு தாத்தா, பாட்டி கண்காணிப்பில் இருந்த அவர், பள்ளி செல்ல முடியாமல் போக, அவரது தாய் மாமன் ராஜகோபால் ரயில்வே துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது உதவியின் பேரில், ரயில்வே துறையில் ஒப்பந்த ஊதிய அடிப்படையில் கேங்மேன் பணியில் வேலைக்குச் சேர்ந்தார் கோதண்டராமன். அவர் முதன் முதலில் வாங்கிய சம்பளம் ரூ.4.35பைசாவாக இருந்துள்ளது.

    kothandaraman 1

    பின்னர் 1980-ம் ஆண்டு ரயில்வே துறையில் பணி நியமன் ஆணையை பெற்றவர், அங்கேயே சுமார் 30 ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ளார். பணி ஓய்வுகுப் பிறகு சிலரைப் போல கோயில் குளம் என செல்லாமல் விட்டுப் போன படிப்பை தொடர முடிவு செய்தார் கோதண்டராமன். கடலூரில் 2002-ம் ஆண்டு 8-ம் வகுப்பு தேர்வை முடித்தவர், 2024-ம் ஆண்டு 10-ம் வகுப்பை தேர்வையும் எழுதியிருந்தார். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தவிர்த்து மற்ற 3 பாடங்களில் தோல்வியடைந்தார். இருப்பினும் அதன் பின் தேர்வெழுதி தமிழ் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் மட்டும் தோல்வியடைந்தவர், விடாமுயற்சியாக மீண்டும் படிக்கத் தொடங்கினார்.

    இந்தாண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிதம்பரம் நந்தனார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் கோதண்டராமன். படிப்பிற்கு வயது முதிர்வு தடங்கல் இல்லை. என்னை பார்த்து மற்ற மாணவர்கள் தேர்வு எழுத போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டினர். வெற்றிக்கு எனது மகன் தான் காரணம் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கோதண்டராமன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனுஷ் பட தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு… யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?…
    Next Article இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி யார் யாருடன்?
    Editor TN Talks

    Related Posts

    பட்ஜெட் தொடர்: உதயநிதி தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: காணொலி வாயிலாக ஆலோசனை!

    July 28, 2026

    மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு விளக்கம்!

    July 28, 2026

    தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஜனநாயகன்’ 5 நாளில் வசூல் இவ்வளவா?

    ‘ஈரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயார்’!.அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    பட்ஜெட் தொடர்: உதயநிதி தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: காணொலி வாயிலாக ஆலோசனை!

    வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதி அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: CJP எச்சரிக்கை!

    மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு விளக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.