Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பெண்களுக்கு போர்க்குணம் இல்லை… பாஜக எம்.பி சர்ச்சை கருத்து…
    இந்தியா

    பெண்களுக்கு போர்க்குணம் இல்லை… பாஜக எம்.பி சர்ச்சை கருத்து…

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    46
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    இந்த சம்பவத்திற்கு பின்பு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மூண்டது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே தாக்குதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது.

    47

    இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்கு போர்குணம் இல்லை என பாஜக எம்.பி ராம் சுந்தர் ஜங்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் பிவானி பகுதியில் மகாராஷ்டிர ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், நமது தங்கள் கைகளை கட்டிக் கொண்டு உயிரை இழந்திருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகள் ஒருவேளை அக்னிவீர் பயிற்சி பெற்றிருந்தால், வெறும் பயங்கரவாதிகளால் 26 பேரை கொன்றிருக்க முடியாது என்றார்.

    மேலும் பயங்கரவாதிகளை எதிர்த்து அவர்கள் போராடியிருக்க வேண்டும் எனவும், அப்படி எதிர்த்து போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும் எனவும், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களிடம் போர்க்குணம், துணிச்சல் மற்றும் வைராக்கியம் இல்லை எனவும், இதனலேயே பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்தார்.

    44 1

    பயங்கரவாதிகளுகு எதிராக பெண்கள் எவ்வாறு போராடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அஹில்யாபாய் ஹோல்கர் ஒரு பெண், ராணி லட்சுமிபாயும் அப்படித்தான். அவர்கள் போராடவில்லையா? எங்கள் சகோதரிகள் தைரியமாக வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

    பாஜக எம்பி சந்தர் ஜங்கராவின் இத்தகைய பேச்சு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த பெண்களை விமர்சிக்கும் விதமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியை பஹல்காம் பயங்கரவாதிகளின் சகோதரி என மத்திய பிரதேச பாஜக எம்.பி குன்வார் விஜய் ஷா பேசியிருந்தது பெரும் பேசுபொருளானது. நீதிமன்றமே அவர் மீது வழக்கு தொடுக்க உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெட்பிளிக்ஸின் டைட்டானிக் ஆவணப்படம்… ஜூன் 11 ரிலீஸ்…
    Next Article மழையால் சாய்ந்த மரம்… பெரும் விபத்து தவிர்ப்பு…
    Editor TN Talks

    Related Posts

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    July 17, 2026

    ‘விஷ்வாஸ் 2026’ திட்டம்: நிலுவை அபராத வழக்குகளை தீர்க்க EPFO-வின் ஒருமுறை வாய்ப்பு  

    July 17, 2026

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை தண்டனை!. புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.