Close Menu
    What's Hot

    கடலூரில் நாளை விஜய் பிரசாரம்! உதயநிதிக்கு அனுமதி மறுப்பு!. பரபரக்கும் அரசியல் வட்டாரங்கள்!

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    “இழப்பீடாக இரத்த பணம்”… உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது உயிரிழந்த கணவர்: ₹30 லட்சம் இழப்பீடு கோரி மனைவி மனு!!
    தமிழ்நாடு

    செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது உயிரிழந்த கணவர்: ₹30 லட்சம் இழப்பீடு கோரி மனைவி மனு!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்தபோது உயிரிழந்த தனது கணவரின் மரணத்திற்கு ₹30 லட்சம் இழப்பீடு மற்றும் பிற நிவாரணங்கள் வழங்கக் கோரி மனைவி தாக்கல் செய்த மனு தொடர்பாக, ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர், மதுரை மண்டல மேலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    விசாரணை ஒத்திவைப்பு

    இளையாங்குடி ரசூலா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாதாம்பிரியாள் தாக்கல் செய்த மனு, நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை குறித்து, ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மதுரை மண்டல மேலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

    மனுதாரரின் கோரிக்கை

    பாதாம்பிரியாள் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

    * நான் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். எனது கணவர் பாலு, எங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    * கடந்த ஆண்டு மூன்று மாதங்களாக எனது கணவர் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் கட்டிட வேலை மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணிகளைச் செய்து வந்தார்.

    * பணியின் போது ரயில்வே நிர்வாகத்தினர் எனது கணவருக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்காமல் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யச் சொல்லியுள்ளனர்.

    * கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி காலை 9 மணியளவில் எனது கணவர் வழக்கம் போல் முனியசாமியுடன் வேலைக்குச் சென்றார்.

    * ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் கட்டிட வேலை நடக்கும் இடத்திலுள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்ததாகவும், அப்போது எனது கணவர் மயக்கமாக இருப்பதாகக் கூறியதால் அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் எனது கணவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்ததாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

    * இந்த சம்பவம் குறித்து ராமேஸ்வரம் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் எந்த முன்னேற்றமும் இல்லை.

    குற்றப்பிரிவுகள் மாற்றம் கோரிக்கை

    எனவே, வழக்கின் குற்றப்பிரிவுகளை மாற்றி, எஸ்சி, எஸ்டி மற்றும் கையால் மலம் அள்ளும் தடைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், தனது கணவர் இறந்ததற்கு, கையால் மலம் அள்ளும் தடைச் சட்டத்தின்படி ₹30 லட்சம் இழப்பீடு மற்றும் பிற நிவாரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் பாதாம்பிரியாள் தனது மனுவில் கோரியுள்ளார்.

    case Chennai High Court
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“முதலமைச்சர் பொம்மை முதல்வர்” – எஸ்.ஐ.டி விசாரணை குறித்து அதிமுக விமர்சனம்!
    Next Article “அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி.. தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்!!
    Editor TN Talks

    Related Posts

    கடலூரில் நாளை விஜய் பிரசாரம்! உதயநிதிக்கு அனுமதி மறுப்பு!. பரபரக்கும் அரசியல் வட்டாரங்கள்!

    April 10, 2026

    விஜய் வாகனத்தை பின்தொடர்ந்தபோது விபத்து!. இருவர் காயம்!

    April 10, 2026

    நகைப்பிரியர்களுக்கு ஷாக்!. இன்று சவரனுக்கு ரூ.1,000 உயர்வு!. தங்கம் விலை நிலவரம்!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடலூரில் நாளை விஜய் பிரசாரம்! உதயநிதிக்கு அனுமதி மறுப்பு!. பரபரக்கும் அரசியல் வட்டாரங்கள்!

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    “இழப்பீடாக இரத்த பணம்”… உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!.

    விஜய் வாகனத்தை பின்தொடர்ந்தபோது விபத்து!. இருவர் காயம்!

    நகைப்பிரியர்களுக்கு ஷாக்!. இன்று சவரனுக்கு ரூ.1,000 உயர்வு!. தங்கம் விலை நிலவரம்!

    Trending Posts

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026

    கடலூரில் நாளை விஜய் பிரசாரம்! உதயநிதிக்கு அனுமதி மறுப்பு!. பரபரக்கும் அரசியல் வட்டாரங்கள்!

    April 10, 2026

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    April 10, 2026

    “இழப்பீடாக இரத்த பணம்”… உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!.

    April 10, 2026

    விஜய் வாகனத்தை பின்தொடர்ந்தபோது விபத்து!. இருவர் காயம்!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.