Close Menu
    What's Hot

    மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    அமைச்சர் விலகல் அரசின் செயல்பாட்டை பாதிக்காது..!! பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்!

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி மனு… பிற்பகலில் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இழிவாக பேசிய நடத்துநர்… பேருந்தை நிறுத்தி பெண்கள் சாலை மறியல்…
    தமிழ்நாடு

    இழிவாக பேசிய நடத்துநர்… பேருந்தை நிறுத்தி பெண்கள் சாலை மறியல்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    30 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து போடி செல்லும் அரசுப் பேருந்தில் துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்த 4 பெண்கள் பயணம் செய்துள்ளனர். தங்களது நிறுத்தமான துரைராஜபுரம் காலனிக்கு வந்த போது பேருந்தை நிறுத்துமாறு நடத்துநரிடம் கூறிய போது, பேருந்து இங்கே நிற்காது என்று தெரிவித்துள்ளார்.

    அடுத்த நிறுத்தமான B.மீனாட்சிபுரம் பேருந்து நிறுத்தத்திலாவது பேருந்தை நிறுத்துங்கள் என்று பெண்கள் கூறிய போது, அங்கேயும் நிற்காது போடியில் மட்டும் தான் நிற்கும் என்று கூறியுள்ளார் நடத்துநர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் ஓட்டுநரிடம் சென்று பேருந்து நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளனர்.

    31 4

    நான்கு பெண்களும் கெஞ்சி கேட்டும் ”பேருந்து நிற்காது, நீங்கள் நிறுத்த சொன்னால் நாங்கள் நிறுத்த வேண்டுமா? உங்களுக்காகத்தானே அரசாங்கம் ஓசியில் பஸ் விட்டுள்ளது. அந்த பஸ்ஸில் ஏறி போக வேண்டியது தானே? எதற்காக எங்கள் உயிரை எடுக்கிறீர்கள் என்று? பெண்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஏளனமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பெண்கள்,
    பேருந்தை நிறுத்தாவிட்டால் நாங்கள் 4 பேரும் பேருந்தில் இருந்து குதிப்போம் என்று பெண்கள் கூச்சலிட்டதால், வேறு வழியில்லாமல் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக பேருந்தின் முன்பக்கத்தில் சென்று நான்கு பெண்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    32 3

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடி தாலுகா காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இப்பகுதி மக்கள் நாள்தோறும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதாக குற்றம்சாட்டினர். பெண்களை ஓட்டுநரும், நடத்துநரும் ஏளனமாக பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியவர்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் தேனி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் உமார் 5 கிலோ மீட்டருக்கு மேல் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் வரிசைக் கட்டி நின்றன.

    இதற்கிடையில் இந்த போக்குவரத்து நெரிசலில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வனிடம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் புகார் மனு அளித்தனர். போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசூர்யா-45 அப்டேட் கொடுத்த நடிகை. .. லப்பர் பந்து ஹிந்தியில் ரீமேக்கா?..
    Next Article கொடைக்கானல் கோடை விழா: பார்வையாளர்களை கவர்ந்த 24வது நாய்கள் கண்காட்சி !
    Editor TN Talks

    Related Posts

    மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    July 23, 2026

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி மனு… பிற்பகலில் விசாரணை

    July 23, 2026

    ஜனநாயகன் ரிலீஸ்..!! ஓபனிங் சீனில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஸ்! என்ன சீனா இருக்கும்..??

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    அமைச்சர் விலகல் அரசின் செயல்பாட்டை பாதிக்காது..!! பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்!

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி மனு… பிற்பகலில் விசாரணை

    “இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்ததே நீங்கள்தான்”!. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

    நாடாளுமன்றத்தில் INDIA கூட்டணி போராட்டம்… எதிர்த்து NDA  கூட்டணியும் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.